மஹாலட்சுமி யந்திரம்:

தெய்வம் மற்றும் தேவதைகள் முடக்கம்,தொழில் மந்தம் முடக்கம்,வறுமை போன்ற பிரச்சினைகளை நீங்கி அருளும் பொருளும் தரும் சூட்சம யந்திரத்தகடு இது.

முறையாக தங்கம் அல்லது செம்புத்தகட்டில் கீறி,பூசை செய்து மந்திர 250008 உருவேற்ற வேண்டும்.


பிறகு தகட்டை சுருட்டி வெள்ளித் தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள அருளும் பொருளும் கிட்டும்.

தகட்டின் நடுவில் பெயர் எழுதி உருவேற்ற வேண்டும்.


என்னோட அனுபவத்தில் பலருக்கு செய்து கொடுத்தேன்.அவரகள் அனைவருமே நல்லநிலையில் இன்றும் உள்ளனர்.அதில் ஒருவர் பெங்களூர் வித்தியானந்தபுரத்தை சேர்ந்த முருகவேல் என்பர் மிகவும் வறிய நிலையில் இருந்தவர்,இன்று மிகச் சிறந்த தொழில் அதிபராக இருக்கார். இதே யந்திரத்தகட்டை லேமினேட் செய்து தொழிலங்களில் வைத்து பூஜிக்க வியாபார விருத்தி உண்டாகும்.மிகவும் சக்தி வாய்ந்த யந்திரத் தகடு இது தேவைக்கு தொடர்பு கொள்க.










ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்  ஸ்ரீம் ஆகச்ச ஆகச்ச ஸ்ரீம்  ஓம்

மந்திரத்தை கூறும் முறை:
புதன் கிழமையில் வரும் வளர்பிறை நாளன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்துவிட்டு தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு பூஜை அறையில் நெய்விளக்கேற்றவேண்டும். இந்த மந்திரத்தை ஜெபிப்பதற்கு ஸ்ரீ லக்ஷ்மி எந்திரம் அவசியம். ஆகையால் இந்த பூஜைக்கு முன்பே அதை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.

ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் தண்ணீரில் நன்கு கழுவி பின் ஒரு பலகை மீது வெள்ளை துணி போட்டு அதற்கு மேல் செம்பு அல்லது பித்தளை தட்டு வைத்து அதில் ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தை வைக்க வேண்டும்.
பின் ஒரு மஞ்சள் துணியை தரையில் விரித்து அதில் சிறுது தண்ணீர் தெளித்துவிட்டு அதன் மீது கிழக்கு நோக்கி அமர வேண்டும். பின் மேலே உள்ள மூலமந்திரத்தை 108 முறை ஜபித்தபடியே ஸ்ரீ லக்ஷ்மி எந்திரத்திற்கு அட்சதை, குங்குமம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.


பிறகு வலது உள்ளங்கையில் சிறிது நீரை ஊற்றி, மந்திரம் சித்தியாக வேண்டும் என்று ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மனதார பிராத்தனை செய்துகொண்டு மூலமந்திரத்தை மூன்று முறை ஜெபித்து பின் அந்த நீரை அருந்திவிடவேண்டும். பிறகு துளசி மாலை கொண்டு “ஓம் ஸ்ரீம் ஐம் ஹ்ரீம்  ஸ்ரீம் ஓம்  ” என்ற மந்திரத்தை 1008 முறை ஜெபிக்கவும்.
பின்பு மந்திரத்தின் பயனாக வீட்டில் செல்வம் சேரவேண்டும் என்று மகாலட்சுமியிடம் மனதார வேண்டிக்கொண்டு தீப தூபம் காட்டி பூஜையை முடிக்க வேண்டும். இந்த பூஜையின்போது வெற்றிலை, பாக்கு, பால், பழங்கள், பாயசம் போன்றவற்றை படைக்கவும்.
இந்த மந்திரத்தின் பயனாக வீட்டில் நிரந்தரமாக செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.