Manthrigam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Manthrigam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 







மாந்திரீக கணபதி பிறையோக முறைகள் .

1 . இந்த கணபதி அகம முறையில் 3 cm உள்ளது பலன் அதிகம் கிடைக்கும்.
2. இதில் உள்ள முலிகைகள் துஷ்பிரயோகம் இருந்து காக்கும்.
3. 66 நாள் அஷ்டசித்தி விநாயகர் வரு 24000 ஏற்றியது.

பிரையோக முறைகள்.

1. இந்த கணபதி கையில் எடுத்து கொண்டு சத்ரு நாசம் கணபதி மந்திர 1008 எற்ற சகல விதமான தடைகள் நீங்கும்.

2 . கணபதி சுற்றி 3 மெழுகுவர்த்தி முக்கோண படிவத்தை  பூஜை செய்ய  தனம் பணம் அருலும்.


3. இந்த கணபதி எடுத்து கொண்டு முச்சந்தில் அல்லது 3 / 4 சாலையில் வைத்து சுத்த பூஜை செய்ய தங்களது வாழ்க்கை நல்ல மற்றும் வரும்.

4. இந்த கணபதி அடியில் தங்கள் புகைப்படம் அல்லது தொழில் visiting card வைத்து பூஜை செய்ய வெற்றி கிடைக்கும்.

5. தாமரை அல்லது ஏருக்கன் திரி கலந்து விளக்கு ஏற்ற குடும்ப வாழ்க்கை ஒற்றுமை கிடைக்கும்.

6.இந்த கணபதி சுருட்டி எற்றி வழிபாடு என்னிய காரியம் நிறைவேறும் நல்லது மட்டுமே.

7. மருத்துவ அல்லது தொழில் செய்பவர்கள் தினமும் இவர் வழி பட வியாபாரம் மற்றும் நோய் விரைவில் குணமாகும் நல்ல பெயர் கிடைக்கும்.

8. மாந்திரீக செய்பவர்கள் இந்த கணபதி முன்னாள் ஓமம் செய்ய தங்களது பெயர் நிலைத்து நிற்கும்.

9. வீடு கட்ட தடை அல்லது நிலம் விற்பனை செய்ய  இடத்தின் படம் அல்லது மண் இவர்கள் அடியில் வைக்க தடைகள் நீங்கும்.

10. குடும்பம் ஒற்றுமைக்கு அணைவருடைய புகைப்படம் இவைகள் அடியில் வைக்கவும்.

11. தியானம் செய்வது தடைகள் உள்ளவர்கள் ஒரு சிறிய பானையில் இந்த கணபதி வைத்து தங்களது அமர்ந்து தியானம் செய்யும் இடத்தில் மேலே பானையே கட்டி வைக்க சிக்கிரம் வெற்றி பெற்ற முடியும்.
இதுவரை யாரும் வெளியே வராமல் இருக்கும் பணம் வசிய முறைகள்.












அஷ்ட கர்மங்கள் செய்ய தெரிந்திருக்க வேண்டியவைகள்



அஷ்ட கர்மங்கள் என்னும் எண் தொழில்கள் செய்ய வேண்டுமானால் அதற்கான விதி முறைகள் சரி வர பயன் படுத்தவில்லை என்றால் அந்த வேலைகள் வெற்றி அடையாது .


அதற்காக நாம் எந்த திசை எந்த கிழமை எந்த திரி எந்த எண்ணெய் என்று சரியாக பயன் படுத்தினால் மட்டுமே வெற்றியடைய முடியும் .

எண்ணெய் மற்றும் திரிகள் 

அஷ்ட கர்மங்கள்               எண்ணெய் & திரி 

1. வசியம்                            -      காராம் பசு நெய்தாமரை நூல் திரி 

2. தம்பனம்                         -       ஆதளைக்கொட்டை எண்ணெய் & பஞ்சுத்திரி  

3. மோகனம்                       -       நல்லெண்ணெய் & கன்னி நூல் திரி 

4.  உச்சாடனம்                   -       புங்கெண்ணெய் & இலவம்பஞ்சு திரி 

5. பேதனம்                           -       புன்னைக்கொட்டை எண்ணெய்துணித்திரி 

6. ஆகர்ஷணம்                  -       எரண்டத்து எண்ணெய் & வெள்ளெருக்கன் திரி 

7. வித்வேஷனம்               -        பசு+ஆடு+பன்றி நெய் & தாமரை நூல்திரி   

8. மாரணம்                           -        வேப்பெண்ணெய்வேலிப்பருத்தி திரி 

மேலே சொல்லிய எண்ணெய் மற்றும் திரி வகைகளை போட்டு விளக்கேற்றி அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.

கிழமைகள் 

அஷ்ட கர்மங்கள்                 கிழமைகள் 

1. வசியம்                            -      ஞாயறு 

2. தம்பனம்                         -       புதன் 

3. மோகனம்                       -       திங்கள் 

4.  உச்சாடனம்                   -       வியாழன்  

5. பேதனம்                           -       செவ்வாய்  

6. ஆகர்ஷணம்                  -       வெள்ளி  

7. வித்வேஷனம்               -       செவ்வாய் 

8. மாரணம்                           -       சனி  

திசைகள் 

அஷ்ட கர்ம பெயர்                திசைகள் 

1. வசியம்                            -      கிழக்கு 

2. தம்பனம்                         -       தென்மேற்கு 

3. மோகனம்                       -       தெற்கு 

4.  உச்சாடனம்                   -       மேற்கு 

5. பேதனம்                           -        வடக்கு 

6. ஆகர்ஷணம்                  -        வடமேற்கு 

7. வித்வேஷனம்               -        தென்மேற்கு 

8. மாரணம்                           -        தெற்கு 

உடைகள் 

வசியம்              -         சிவப்பு 

மோகனம்         -          மஞ்சள்

பேதனம்            -           வெள்ளை

சகல கர்மம்     -            தனி பட்டு 

உலோகம் 

வசியம்              -          காரியம் 

மோகனம்          -          வங்கம் 

ஆகர்சனம்          -         பொன் 

தம்பனம்              -          செம்பு

உச்சாடனம்       -          வெள்ளிஈயம் 

வித்வேஷனம் -           குருத்தோலை 

பேதனம்              -           இரும்பு 

மாரணம்              -         வெள்ளி 

அஷ்ட கர்ம செயல்களான வசியம்ஆகர்ஷணம்மோகனம்வித்வேஷனம்,தம்பனம்உச்சாடனம்பேதனம்மாரணம் ஆகிய காரியங்களுக்கான நூல் இழை கணக்கினை நாம் தெளிவாக அறியமுடிகிறது. அவையாவது :

வசியம்               - இழை

மோகனம்          - இழை

தம்பனம்            - இழை

உச்சாடனம்        - இழை

ஆகர்ஷணம்     - இழை

வித்வேஷனம் - இழை

பேதனம்             - இழை

மாரணம்             - இழை  

இவற்றை தெளிவாக கவனத்தில் கொண்டு அந்தந்த எந்திரங்கள் எழுதும்போது அதற்குரிய இழை கணக்கில் அதற்குரிய வண்ண நூலால் கட்டி மந்திரங்களை உருவேற்றினால் அந்த காரியங்கள் ஜெயமுடன் முடியும்.
மாந்திரீக தொழிலில் உடற்கட்டு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது .இந்த உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து கொண்டு மயானத்தில் அல்லது வெளி இடங்களில் பூஜை செய்யும் பொது மற்ற தேவதைகள் நாம் செய்யும் பூஜையை தடை செய்யும் பொருட்டு நம்மை தாக்க வரும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் .முதலில் உடற்கட்டு மந்திரத்தை முறையாக சித்தி செய்து கொண்டு அதன் பிறகு எந்த ஒரு பூஜையையும் துவங்க வேண்டும் .



உடற்கட்டு மந்திரம் :

ஓம் உமா மகேஸ்வரன் முன்னிற்க பாதமிரண்டும் பூமி தேவி காக்க ,
கனுக்காலிரண்டும் கணபதி காக்க ,
துடையுமுந்தியும் துர்க்கை காக்க ,
வயிறு மார்பும் வைரவன் காக்க ,
கழுத்தும் புஜமும் கதிர்வேல் காக்க ,
கண்ணும் புருவமும் காளி காக்க ,
முகமும் கபாலமும் மும்மூர்த்தி காக்க,
ஓம் அம் உம் சம் வம் சிவ சிவா 
கட்டு கட்டு என் தேகம் முழுவதும் 
சங்கு சக்கரம் காக்க பகைவரைக்கட்டு ,
பிசாசுகளை கட்டு எதிரிகளை கட்டு ஏவலை கட்டு ,
இந்திரன் முதல் ஈசானயங்கட்டு நான் தொட்ட மந்திரம் நீ தொட்ட மந்திரம் ,
நான் தொட்ட மூலி ,நீ தொட்ட மூலி 
எட்டு திசையும் பதினாறு கோணமும் என் முகமாக 
ஓம் சிவய நம சிவய நம சிவய நம .

இந்த மந்திரத்தை ஓடுகின்ற தண்ணீரில் நின்று கொண்டு 1008 ஜெபித்து விட்டு மறுநாளில் இருந்து பிள்ளையார் பிடித்து வைத்து அருகு சூட்டி அதற்கான அவள் பொறி கடலை படைத்து ஒரு நாளுக்கு 108 வீதம் 11நாட்கள் ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும் .இதனால் சர்வ மந்திர சித்தியும் சர்வ மூலிகை சித்தியும் ஆகும் .



இப்படி அனுபவத்தில் பல உள்ளன ஆகவே ஏதாவது புத்தகங்களை படித்து விட்டு மாந்திரீகம் செய்கிறேன் என்று முயற்சிக்க வேண்டாம் ஏனென்றால் அந்த மந்திரங்களில் எதிர் விளைவுகள் நமக்கு கிடைக்க இருக்கும் வெற்றிகளை தடை செய்யும் .அதனால் சரியானவர்களிடம் பயின்று பிரயோகம் செய்ய முயலுங்கள் .

மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்கள்

பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும்,
சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய,
சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில்உச்சரிக்கப்படும் மந்திரங்கள்
 ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.

வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு


(1) காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூர எறிந்து விடலாம்.

வேறு முறை : புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை எடுத்து 13 முறை தலையை சுற்றி பின்பு அதை 4 துண்டாக வெட்டி நான்கு தெருக்கள் இணையும் இடத்தில் திக்கிற்கு ஒன்றாக எறிந்து விடவும். இது தொடர்ந்து முதல் நாள் செய்த அதே நேரத்தில் 7 நாட்கள் செய்ய வேண்டும். இது வேலை இல்லாதவரின் எதிர் மறை சக்திகளை அழித்து தடைகள் நீங்க வழி செய்யும்

(1) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது.


(2)காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்
(3) இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்

(4) வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ செயற்கையாகஅமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்

(5) காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்

(6) சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.

(7) துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்





எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்


(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.


(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.


வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு


1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும். 


2. வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.

3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.

4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.

5. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7 நாட்கள் மட்டும்.

கடன் தொல்லை :
1. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ் உபயோகத்தை நிறுத்தவும்.
2. தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.
3. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம் பருப்பை மறு நாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம்.
4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில் தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.
5. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.
6. முடியும் போதெல்லாம் 11 பால் பாக்கெட்டுகள் கோவிலுக்கு கொடுத்து வரவும்

மந்திரம், மாயவித்தை  சில அடிப்படைகள்


அஸ்டகர்மம்

மாந்திரீக சக்தி மூலம் நாம்
 1.வசியம் 
2. மோகனம் 
3. ஆகர்சணம் 
4. தம்பனம்
 5. பேதனம்
6. வித்வேசணம் 
7. உச்சாடனம் 
8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். 

மந்திரங்கள்

வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.


உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.


ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.


பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.


வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.


மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. 



மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

பலா பலகை - தம்பனம்
மாம் பலகை - மோகம்
வில்வம் - வசியம்
பேய்த்தேத்தான் - பேதனம்
எட்டிப்பலகை - வித்துவேடணம்
அத்திப்பலகை - மாரணம்
வெண்நாவல் - ஆக்ருசணம் 
வெப்பாலை - உச்சாடனம்.

இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.

மல்லிகை - வசியம்
முல்லை - மோகனம்
தும்பை - உச்சாடனம்
அரளி - ஆக்ருசணம்
காக்கனமலர் - வித்துவேடணம்
ஊமத்தம் - பேதனம்
கடலைமலர் - மாரணம்
தாமரை - தம்பனம்

இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர். 

செம்பட்டு - வசியம்
மஞ்சள் பட்டு - மோகனம்
பச்சைப்பட்டு - தம்பனம்
வெள்ளைப் பட்டு - பேதனம்
கழுதைவண்ணப்பட்டு - வித்துவேடணம்
பஞ்சவர்ணபட்டு - உச்சாடனம்
ஆந்தைவண்ணப்பட்டு - ஆக்ருசணம் 
கருப்பு வண்ணப்பட்டு - மாரணம். 

சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும்,
 அதன் மூல மந்திரங்களைப் பற்றியும்,
 அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம்.

 அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம். 


கிழக்கு - இந்திரன் - தம்பனம்
தென்கிழக்கு - அக்கினி - மோகனம்
தெற்கு - எமன் - மாரணம்
தென்மேற்கு - நிருதி - உச்சாடனம்
மேற்கு - வருணன் - ஆக்ருசணம்
வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம்
வடக்கு - குபேரன் - பேதனம்
வடகிழக்கு - ஈசன் - வசியம்

இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும்.
 மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

உருத்திராட்சம் - வசியமாகும்
மிளகுமணி - மோகனந்தான்
துளசிமணி - உச்சாடனம்
தாமரைமணி - தம்பனம்
நாகமணி - மாரணம்
சங்குமணி - ஆக்ருசணம்
எட்டிமணி - வித்துவேடணம்
வெண்முத்து - பேதனம்


இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.

ஞாயிறு - வசியம் மற்றும் பேதனம்

திங்கள் - தம்பனம்

செவ்வாய் - மோகனம்

புதன் - மாரணம்

வியாழன் - உச்சாடனம்

வெள்ளி - ஆக்ருசணம்

சனி - வித்துவேடணம்


அஷ்ட கர்ம பெயர்                கிழமைகள் 


1. வசியம்                            -      ஞாயறு 

2. தம்பனம்                         -       புதன் 

3. மோகனம்                       -       திங்கள் 

4.  உச்சாடனம்                   -       வியாழன்  

5. பேதனம்                           -       செவ்வாய்  

6. ஆகர்ஷணம்                  -       வெள்ளி  

7. வித்வேஷனம்               -       செவ்வாய் 


8. மாரணம்                           -       சனி  

  • மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும். 
  • முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்கு மலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள கை விரல்களின் கணுக்களை கொண்டு கணிக்கலாம் அல்லது உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும்.
  • மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு சாதனமாகும். மந்திரங்கள் நம் எண்ணங்களை வலுப்படுத்தி, ஆற்றலை வளர்த்து, மனச் சஞ்சலத்தைக் குறைத்து, மனதை அமைதிப் படுத்தி நம்மிடத்து நல்ல எண்ணங்களை வளர்க்கும் ஆற்றல்பெற்றவை. மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், {உடல், மனம், ஆன்மா} மூன்றையும் அந்த மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தில், அல்லது தேவதையில் நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய விரிப்பில் (, உரிய மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை, வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க வேண்டும். கண்டிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது. 


  • அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக, 2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில் மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக பலன் உள்ளது. 


  • அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு நோக்கியும், மாரண மந்திரங்கள் தெற்கு நோக்கியும் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நாவசையாமல் உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம். 16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். 


  • பூசை அறை சிறப்பானதாக இருக்க வேண்டும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது.  யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. 


  • அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது. பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும். மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. அகோர மந்திரங்கள் முறைப்படி வழிபாடு செய்யாவிட்டால் நமக்கு எதிர்விளைவுகளைக் கொடுத்து விட வாய்ப்புள்ளது.
  •  அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
  • வீரபத்திரரின் பீஜ மந்திரமான "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.
  • இதில் மந்திரம் என்பது - "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி". 
  • மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.