இந்த தொடரின் மூலமாக அடியேனிடமுள்ள (?) மூலிகைகளை விற்கவோ , அடியேனுக்கு தெரிந்தவர்களிடமுள்ள மூலிகைகளை விற்கவோ, அடியேனுக்கு தெரிந்தவர்களை அறிமுகப்படுத்தி வியாபாரம் செய்யவோ அல்லது அடியேன் யோகம் கற்று தருவதற்காக சீடர்களை என்னிடம் வரவழைப்பதற்காகவோ முயற்சிப்பதாக தயவு செய்து எண்ண வேண்டாம்.

இந்த கட்டுரையின் உள்நோக்கம் – இந்த தெய்வீக கலையின் அதியற்புத மேன்மைதனை உணரும் அன்பர்கள் இந்த தெய்வீக கலையின்பால் ஈர்க்கப்பட்டு இதனை கற்க முற்பட்டுவார்கள். அதனால் அதன்பயனாக அவர்கள் வாழும் ஊர் சிறப்புறும் , ஒரு ஊர் சிறப்புற்றால் , ஒரு நகரம் சிறப்புறும் , ஒரு நகரம் சிறப்புற்றால் , ஒரு மாநிலம் சிறப்புறும் , ஒரு மாநிலம் சிறப்புற்றால் , ஒரு நாடு சிறப்புறும் , ஒரு நாடு  சிறப்புற்றால் படிப்படியாக இந்த உலகமே அற்புத மாற்றம் காணும் என்கிற பேராசையினால்இந்த கலையின் மிக உள்ளார்ந்த சூட்சும ரகசியங்களைத் தவிர்த்து மற்றதை இங்கே பதிவிடுகின்றேன் .

மாந்திரீக பாடம் -1

1, மஹா கணபதி  தியானம் 

2, தெட்சணாமூர்த்தி  தியானம் 

3, சகல மந்திர சாபநிவர்த்தி 

4, பிரணாப் பிரதிஷ்டா மந்திரம் 

5, சகல யந்திரங்களுக்கும் மந்திரம் 

6, மந்திர காயத்திரி  

7, யந்திர காயத்திரி

8, சகல  கருக்கலுக்கும் சக்தி அளிக்கும் மந்திரம் 

9, பூஜிக்கும் தேவதைகளுக்கு பந்தந் நிவர்த்தி 

10,சகல தேவதா வசிய மந்திரம் 


ஆக 10 வித மந்திரங்களை கீழே காண்போம் 

1. மகா கணபதி தியானம் 

ஐம் கணபதி
 க்லீம் கணபதி 
ஸவ்ம் கணபதி 
வாவா கணபதி 
சர்வ தேவாதி தேவர்களும்
 சர்வ ஜீவராசிகளும்
நான் நினைத்த அணைத்தும் 
என் வசியமாக 
வசிவசி அசியசி ஸ்வாஹா 


2) தெஷிணாமூர்த்தி தியானம் 

ஓம் நமசிவய சிவ சிவ சரணம் சிவானந்தம் 

சிவ சிவ சிவாய ஆக்ருஷ்ய 

( குறிப்பு: எந்த மந்திரம் சொல்லும் முன்பு மேற்கண்ட மந்திரத்தை தெட்சணாமூர்த்தி சன்னதியில் இருந்து 21 முறை சொல்லிவிட்டு பிறகு மந்திரங்கள் உச்சரித்தால் மந்திரம் சீக்கிரம் பலன் தரும்.)

3) சகல மந்திரங்களின் சாப நிவர்த்தி  

ஓம் அங் உங் சிங் க்லீம் ஹபீம் அவவும் சல மந்திரங்களின் சாபம் நாசி மாசி சுவாகா .

4) பிராண பிரதிஷ்டை மந்திரம் 

ஆம் ஹ்ரீம் க்ரோம் யரல வஷக்ஷனி ஹோம் ஹம்ச ஷெஷம் சோகம் அம்ச அஸ்ய (தேவதை பெயர்)பிராணா இகிப்ராணா ஜீவ இஹஸ்திதா   அஸ்யஸர் வேந்திரியாணி வாங்க்மன த்வச் சஹீஷ் சோதர தான சமான இகைவ .ஆக்த்ய அஸ்மின் பிம்பே யந்திரே (தேவதையின் பெயர்)ஸூகம் சிரம் திஷ்டந்து சுவாஹா .(தேவதையின் பெயர்)பிராணன் பிரதிஷ்டையாமி .

5) சகல யந்திரங்களுக்கும் அர்ச்சனை மந்திரம் 

 1) ஓம் பிராணயா பிராண ரூபாய பிராண லிங்காய பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

2) ஓம் ஜீவாயா ஜீவா ரூபாயா ஜீவ லிங்காயா ஜீவ பிரதிஷ்ட்டாய ஸ்வாகா 

3) ஓம் மந்திராயா மந்திர ரூபாயா மந்திர லிங்காயா ம்,மந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

4) ஓம் தந்திராயா தந்திர ரூபாயா தந்திர லிங்கயாதந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

5) ஓம் பிரம்மாயா பிரம்மா ரூபாயா பிரம்மா லிங்காயா பிரம்மா பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

6) மந்திர காயத்ரி .

மந்திர ராஜாய வித்மஹே மஹா மந்திராய தீமகி தன்னோ மந்திர பிரசோதயாத் 

7) யந்திர காயத்ரி 

யந்திர ராஜாய வித்மஹே மஹா யந்திராய தீமகி தன்னோ யந்திர பிரசோதயாத் .

8) சகல  கருக்கலுக்கும் சக்தி அளிக்கும் மந்திரம் 

நங் லங் மங் லங் சிங் லங் வங் லங் யங் லங் லம் லங் ஓம் ஆம் லா லீ லு உம் படு ஸ்வாஹா ரெட்டு கட்டு கட்டவிழ்க்கவும் .

9) பூஜிக்கும் தேவதைகளுக்கு பந்தந் நிவர்த்தி 

ஐம் ஹ்ரீம் பகளாமுகி பூஜ்யமான சகல தேவதா மம சத்ரு பிரேரித தேவதாக்கு பந்தாத் முக்த பந்தா குரு குரு ஸ்வாஹா வங் சிங் உச்சாடாய உச்சாடாய .

10)  சகல தேவதா வசிய மந்திரம் 

மீறியும் கிரியும் சிரியும் வசி வசி

இந்த பத்து மந்திரங்களை முறைப்படி தெரிந்து செய்வதுவே நலம் செய்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பலன்  தரும் .
--------------------------------------------------------------------------------------------------------------------------------

மாந்திரீக பயிற்சி முதல் நிலை-பாடம் 2


மாந்திரீக பாடம் 2

மாந்திரீகத்திற்கு என்று அடிப்படை கோட்பாடுகள் உள்ளது. மாந்திரீகத்தில் மந்திரம், தந்திரம், எந்திரம் என்ற மூன்று அடிப்படையைச் சார்ந்ததாக உள்ளது. மந்திரம் என்பதை மந்திரம் என்ற பகுதியில் சிறப்பாக விளக்கியுள்ளோம். இந்திய மாந்திரீகத்தில் பில்லி, சூனியம், ஏவல், மறைப்பு, வைப்பு மற்றும் அஸ்டகர்மங்கள் கூடிய அங்கமாக உள்ளது. தற்கால அறிவியல் இவற்றை மூடத்தனம் என்று கூறினாலும் உலகால் அறியப்படாத பல விசயங்களை அறிவியல் கண்பிடிக்க முடியாமல் இருக்கிறது.

இன்று அறிவியலாக இருப்பது நாளை அறிவியலாக இருப்பதில்லை. அதேபோல் ஆன்மீகமும் பல இடங்களில் ஆன்மீகமாக இருப்பதில்லை. உண்மையில் ஆன்மீகமும், அறிவியலும் எப்பொழுது ஒரு தேடலாகவே அமைகிறது. இத்தகைய மாந்திரீகத்திற்கு என்று தனிக்கோட்பாடுகள் உள்ளது. இத்தகைய கோட்பாடுகளை இங்கு பார்ப்போம்.

மாந்திரீகம் என்பது எண்ணங்களின் வலிமையைக் கொண்டும் மனதின் திறமாகிய மந்திரங்கள் வைத்தும் செய்யப்படும் ஒரு அபூர்வக்கலையாகும். அவ்வாறு செய்ய விரும்புபவர் ஒரு சக்தி வாய்ந்த இருக்கவேண்டும். இந்த அறிய சக்தியை அவர் பிரபஞ்சத்தில் இருந்து பெறுவதற்கு சில பயிற்சிகள் தேவை. அத்தகைய பயிற்சி இல்லாதவர் ஒன்றும் சாதித்து விடமுடியாது. உடலில் இயங்குதசை, இயக்குதசை, இயங்காதசை, இயங்கிஇயக்குதசை என்று நான்கு வகையுண்டு. இந்த நான்கையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடியும்.

இயங்குதசை:-

இருதயம் ஒரு இயங்குதசையாகும். அது எப்பொழுதும் துடித்துக் கொண்டே இருக்கும். அதன் வேகத்தை இயற்கைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவது தியானமாகும்.

இயங்குதசை:-

கை, கால், கண், வாய் ஆகியவைகள் இயக்குதசையாகும். இவைகள் நமது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுபவை. கால்களை ஆசனங்கள் மூலம் ஒருமைப்படுத்துவதும், கைகளை முத்திரைகள் மூலம் ஒருமைப்படுத்துவதும் வேண்டும்.

இயங்கி இயக்கு தசை:-

நம் உடம்பில் உள்ள சில தசைகள் இயங்கவும் செய்யும், நம் இயக்கத்திற்கும் கட்டுப்படும். உதாரணமாக நம் மூளையை சொல்லலாம்.
பொதுவாக ஒரு மனிதன் தன் முயற்சியால் ஒரு நிலத்தை தோண்டி அதில் விதையை விதைக்கிறான். அந்த விதை முளைப்பதற்கு அவனுடைய சக்தியோ, அல்லது அறிவியல் சக்தியோ உபயோகப்படாது. அதற்கு ஒரு மறைமுக பிரபஞ்ச சக்தி தேவை. அந்த மறைமுக உயர் பிரபஞ்ச சக்தியை தான் கடவுள் என்கிறோம். கடவுளின் தன்மையை முப்பரிமாணத்தில் காணப்படுகிறது. கடவுள் உருவாக்குகிறார், நடத்துகிறார். முடிவிற்கு கொண்டு வருகிறார். இம்மூன்றும் கடவுளின் வேலையாக கூறப்படுகிறது. இம்மூன்று தொழிலைச் சார்ந்து மனிதனின் வேண்டுதல் அமைகிறது. அந்த வேண்டுதல் நன்மையைக் கொடுப்பதாகவும், தீமையை உருவாக்குவதாகவும் அமையலாம்.

மாந்திரீக தாந்திரியங்கள்:-

தாந்திரியங்கள் என்ற உடன் இரண்டு நிகழ்வுகள் உள்ளன. அவற்றில் ஒன்று கைபிரட்டு வேலை அடுத்தது தாந்திரிக வழிபாட்டு மூலம் தெய்வங்களை தன் வழிக்கு கொண்டு வந்து செயல்படுத்த வைக்கும் விதமாகும்.

தந்திர கைபிரட்டு வேலை:-

ஒரு மந்திரவாதி தன்னை நம்புவதற்காக அவர்கள் செய்யும் தந்திர ஜாலங்கள் ஆகும். இவை தனது கூறிய அறிவின் மூலமாக அடுத்தவர்களை ஏமாற்றும் ஜாலமாகும். வாயில் லிங்கம் வரவழைப்பதில் இருந்து ரோட்டில் வித்தை காட்டும் தந்திரவாதி செய்யும் பல காரியங்கள் இந்த கைபிரட்டைச் சார்ந்ததாக அமைகிறது. சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் இத்தகைய கைபிரட்டுகள் ஒரு பயத்துடன் கூடிய நம்பிக்கையை உருவாக்குகிறது. உதாரணமாக ஒருவர் மந்திரவாதி கொடுத்த பழத்தை உரித்த பொழுது அந்த பழம் துண்டுதுண்டாக பிரிந்து விழுந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார். அதை உருவாக்க அந்த மந்திரவாதி அந்த முழு பழத்தை முன்னாலே ஒரு ஊசியைப் பழத்தில் குத்தி அந்த பழத்தை முழுசாக வைத்தே அறுத்துவிட்டார். இதேபோன்று பல வித்தைகள் உண்டு. திருநீர் வரவழைப்பது, வாயிலிருந்து இரத்தம் கக்க வைப்பது, கையில் பூ வரவழைப்பது போன்றவையாகும்.

தந்திரயோகம்:-

தந்திர யோகத்தின் மூலம் தெய்வீக சக்தியை எளிதில் அடைவதற்கு உரிய தந்திரமுறைகள் ஆகும். சிவ அம்சத்தில் திரு மந்திரம் என்ற தமிழ் நூலில் பஞ்ச அச்சரங்களைக் கொண்டு எவ்வாறு ஆன்மீக சக்தியைப் பெறலாம் என்று 24வகை தந்திர முறைகள் உள்ளன. மகாமேரு உபாசனையும் ஒரு தந்திர முறையாகும். குலத்தந்திரம், ஊதாபுத்தர் தந்திரம் போன்ற பல தந்திர முறைகள் உள்ளன. இவைகளில் சிறந்தது சிவ அச்சர தந்திரமும், மகாமேரு தந்திரமும் ஆகும். சிவ அச்சர தந்திரமாகிய சிவாயநம என்ற ஐந்து அச்சரங்களும் நமது உடலில் உள்ள ஐந்து விதமான சக்தியின் கேந்திரமாகும்.

கடவுள்உருவாக்குகிறார்:-

மனிதன் தனக்கு வாரிசாக ஒரு குழந்தை உருவாக வேண்டும் என்று எண்ணுகின்றான். அதே நேரத்தில் அதிகம் குழந்தை உள்ளவனோ தனக்கு குழந்தை தேவை இல்லை என்று எண்ணுகின்றான்.

கடவுள்வழிநடத்துகிறார்:-

கடவுள் வழி நடத்துவது தனக்கு பொருளாதாரத்தில் சிறப்பான வழி நடத்தல் தேவை என்று நினைக்கின்றான். வேறு சிலரோ அமைதியான மன நிறைவான வாழ்க்கை தேவை என்று நினைக்கின்றான்.

முடிவிற்கு கொண்டு வருகிறவர்:-

பல நல்ல காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் உண்டு. அதே நேரத்தில் தீய காரியங்கள் தீமையாக முடிவிற்கு வராமல் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்களும் உண்டு.

அறியாமை, இயலாமை, பய உணர்வுகள், பேராசை ஆகியவைகள் மனிதன் கடவுளைத் தேடும் காரணங்களாக அமைந்துள்ளது.

இதேக் காரணங்கள் மாந்திரீகத்தின் மீதும் நாட்டம் அடையச் செய்கிறது. ஆன்மிகம் என்பது ஒரு சரியானத் தேர்வு. மாந்திரீகம் கூட ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்று கூறலாம். இத்தகைய மாந்திரீகத்தில் இரண்டு வகையான வேண்டுதல்கள் உள்ளன. ஒன்று ஒருவர் சுகமடைய வேண்டும் என்று வேண்டுதல். இது நன்மையைச் சார்ந்த வேண்டுதல் ஆகும். ஒருவர் நோய்வாய்ப்பட வேண்டும் அல்லது வறுமை அடைய வேண்டும் என்ற தீமையான காரியங்களைச் செய்வது ஒரு வகையாகும். தான் விரும்பியப் பெண்ணை அடைய வேண்டும் போன்ற காரியங்களை அடைய விரும்புவது மூன்றாவது வகையாகும். பொதுவாக மாந்திரீகம் என்பது ஒருவரின் விருப்பு வெறுப்பைச்சார்ந்தேஇருக்கும்.

எங்கள் இடம் மாந்திரீக யந்திரம் மை வசிய தாயத்து கிடைக்கும்
------------------------------------------------------------------------------------------------------------------

மாந்திரீக பயிற்சி முதல் நிலை பாடம் 3




பொதுவாக மாந்திரீகத்தில் 95 % வித்தைகள் மூலிகையை முன்னிலை படுத்தியே வருகிறது .இந்த வித்தையை சரியாக உணர்ந்து கொண்டால் அவனை இந்த வையகத்தில் எவராலும் ஜெயிக்க முடியாது .

இந்த வித்தையை அறிந்தவர்களுக்கு நிச்சயமாக 

பஞ்ச பட்சி சாஸ்திரமும் அறிந்திருக்க வேண்டும் ,ஏனென்றால் மூலிகைகளுக்கு உயிர் உண்டு அந்த மூலிகைகளுக்கு முறையாக சாப நிவர்த்தி செய்யாமல் பிடுங்கினால் அந்த சாபமானது நம்மை தாக்கும் என்பதில் ஐயமில்லை .

அதற்காக மூலிகை சாபநிவர்த்தி செய்யும் முறையை பார்ப்போம்  

எந்த மூலிகைக்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டுமோ அந்த மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து காய்ந்த தரையாக இருந்தால் அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நீர் ஊற்றி வைக்க வேண்டும் அப்போது தான் பிடுங்க எளிதாக இருக்கும் .

தேவையானவை :

முனை முறியாத மஞ்சள் 
நூல் 
மஞ்சள் போடி 
பத்தி 
சூடகம் 
சாம்பிராணி 
வாழைபழம் 
வெற்றிலை 
பாக்கு 
நைவேத்தியம் 

இவைகளை அந்த மூலிகையின் முன் படைத்து அதற்கு கீழ் கண்ட மந்திரத்தை கூறி சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .

மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் :

ஆனைமுகனை அனுதினம் மறவேன் 
அகத்தியர் சாபம் நசி நசி 
சித்தர்கள் சாபம் நசி நசி 
தேவர்கள் சாபம் நசி நசி 
மூவர்கள் சாபம் நசி நசி 
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி 

 என்று மூன்று தடவை விபூதி கையில் எடுத்து வைத்து கொண்டு கூறி மூலிகை மேல்போட மூலிகை சாபநிவர்த்திபெறும்  
அதன் பின் மஞ்சள் நூல் காப்புக்கட்டி முலிகை பிடுங்க வேண்டும் 

பிடுங்கிய மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் ஜெபிக்க வேண்டும் 

மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் :

ஓம் மூலி மஹா மூலி ஜீவ மூலி 
உன் உயிர் உன் உடலில் நிலைத்து நிற்க சிவா 

என்று மூன்று தடவை மந்திரம் ஜெபித்து கொஞ்சம் விபூதியும் அருகம்பில்லும் மூலிகை மேல் போடா மூலிகை உயிருடன் இருந்து பலன் கொடுக்கும் .

இந்த முறையில் மூலிகை பிடுங்கி அதற்குரிய யந்திரத்தை எழுதி பிரயோகம் செய்தால் மட்டுமே அது முளிமையான பலன் கொடுக்கும் .இல்லை என்றால் 100% பலன்  முடியாது .

மூலிகை வித்தைகள் :

  • பஞ்ச பட்சி மூலிகை வித்தை 
  • ஜல ஸ்தம்பன மூலிகை 
  • சுக்கில ஸ்தம்பன மூலிகை 
  • சர்ப்ப ஸ்தம்பன மூலிகை 
  • தெய்வ ஆகர்சன மூலிகை 
  • ஸ்திரி ஆகர்சன மூலிகை 
  • மிருக வித்வேஷன மூலிகை 
  • விஷ மாரண மூலிகை 
  • பூத பிசாசு மாரண மூலிகை 
  • சொர்ண வசிய மூலிகை 
  • தேவதை வசிய மூலிகை 
  • அக்கினி ஸ்தம்பன மூலிகை 
  • பூத உச்சாடன மூலிகை 
  • சத்ரு பேதன மூலிகை 

இப்படி இன்னும் பல மூலிகை வித்தைகள் உள்ளன 
இவைகளை முறைப்படி பயின்றால் மட்டுமே வெற்றிகிடைக்கும் .
 -----===================================================


அஷ்ட கர்மங்கள் :

வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.

உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.

ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. 

மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

பலா பலகை - தம்பனம்
மாம் பலகை - மோகம்
வில்வம் - வசியம்
பேய்த்தேத்தான் - பேதனம்
எட்டிப்பலகை - வித்துவேடணம்
அத்திப்பலகை - மாரணம்
வெண்நாவல் - ஆக்ருசணம் 
வெப்பாலை - உச்சாடனம்.



இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.

மல்லிகை - வசியம்
முல்லை - மோகனம்
தும்பை - உச்சாடனம்
அரளி - ஆக்ருசணம்
காக்கனமலர் - வித்துவேடணம்
ஊமத்தம் - பேதனம்
கடலைமலர் - மாரணம்
தாமரை - தம்பனம்

இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர். 

செம்பட்டு - வசியம்
மஞ்சள் பட்டு - மோகனம்
பச்சைப்பட்டு - தம்பனம்
வெள்ளைப் பட்டு - பேதனம்
கழுதைவண்ணப்பட்டு - வித்துவேடணம்
பஞ்சவர்ணபட்டு - உச்சாடனம்
ஆந்தைவண்ணப்பட்டு - ஆக்ருசணம் 
கருப்பு வண்ணப்பட்டு - மாரணம். 

சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும்,அதன் மூல மந்திரங்களைப் பற்றியும்,அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம். 

கிழக்கு - இந்திரன் - தம்பனம்
தென்கிழக்கு - அக்கினி - மோகனம்
தெற்கு - எமன் - மாரணம்
தென்மேற்கு - நிருதி - உச்சாடனம்
மேற்கு - வருணன் - ஆக்ருசணம்
வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம்
வடக்கு - குபேரன் - பேதனம்
வடகிழக்கு - ஈசன் - வசியம்

இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும்.
 மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

உருத்திராட்சம் - வசியமாகும்
மிளகுமணி - மோகனந்தான்
துளசிமணி - உச்சாடனம்
தாமரைமணி - தம்பனம்
நாகமணி - மாரணம்
சங்குமணி - ஆக்ருசணம்
எட்டிமணி - வித்துவேடணம்
வெண்முத்து - பேதனம்

இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.

ஞாயிறு - வசியம் மற்றும் பேதனம்

திங்கள் - தம்பனம்

செவ்வாய் - மோகனம்

புதன் - மாரணம்

வியாழன் - உச்சாடனம்

வெள்ளி - ஆக்ருசணம்

சனி - வித்துவேடணம்

மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும். 

முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்கு மலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள கை விரல்களின் கணுக்களை கொண்டு கணிக்கலாம் அல்லது உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும்.

மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு சாதனமாகும். மந்திரங்கள் நம் எண்ணங்களை வலுப்படுத்தி, ஆற்றலை வளர்த்து, மனச் சஞ்சலத்தைக் குறைத்து, மனதை அமைதிப் படுத்தி நம்மிடத்து நல்ல எண்ணங்களை வளர்க்கும் ஆற்றல்பெற்றவை. மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், {உடல், மனம், ஆன்மா} மூன்றையும் அந்த மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தில், அல்லது தேவதையில் நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய விரிப்பில் (, உரிய மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை, வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க வேண்டும். கண்டிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது. 

அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக, 2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில் மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக பலன் உள்ளது. 

அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு நோக்கியும், மாரண மந்திரங்கள் தெற்கு நோக்கியும் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நாவசையாமல் உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம். 16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். 

பூசை அறை சிறப்பானதாக இருக்க வேண்டும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது.  யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. 

அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது. பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும். மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. அகோர மந்திரங்கள் முறைப்படி வழிபாடு செய்யாவிட்டால் நமக்கு எதிர்விளைவுகளைக் கொடுத்து விட வாய்ப்புள்ளது.

=======================================================================

மாந்திரீக பயிற்சி முதல் நிலை பாடம் -5

பாடம் -5  எட்ஷணி சித்து 



தேவர்களில் ஓர் பிரிவை சேர்ந்தவர்கள் யஷர்கள் இவர்களின் மனைவிகள் தான் யக்ஷினிகள். யக்ஷினிகள் பல உண்டு இவர்கள் ஒவ்வ்ருவரித்திலும் பல வகை அபார சக்திகள் உள்ளது.

நமது மனதில் தோண்றும் பல எண்ணங்களை  நிறைவேற்றிகொள்ள யக்ஷினி சாதனை செய்து அவர்களை நமது வசமாக்கி கொண்டால் அவர்களை கொண்டு நம்மால் முடியாத செயல்களை கூட முடியும்படி செய்து கொலள்ளலாம்

இந்த யஷஜாதியர் அணைவரும் சிர ஜீவரசிகளவர்.இவர்கள் ஆதிகாலம் தொடங்கி இண்றுவரை இருப்பவர்கள் எதிர்காலத்திலும் அவர்கள் வாள்வதில்  ஐயம் இல்லை  என சாஸ்திரங்கள் கூறுகிண்றன..

யக்ஷினி தேவதைகளை ஒருவர் தன் வசமாக்கி கொள்ள அந்த யக்ஷினி குரித்து தவம் செய்யும் காலத்தில் கண்டிப்பாக மது, மாமிசம், வெற்றிலை ,பாக்கு, மற்றும் புகை பிடித்தல் கூடாது தங்கள் உடலை மற்றவர் தொடாதபடி வைத்துகொள்ள வேண்டும்.

யக்ஷினி சித்தி செய்துகொள்ள இரவு நேரம் மிக சிறந்தது.

மன சுத்தியுடன் ஓர் அமைதியான இடத்தில் தர்பை ஆசனமிட்டு அமர்ந்து தவம் இருக்க வேண்டும் எந்த   யக்ஷினியை எண்ணி தவம் இருக்கிண்ற்ற்ற்றோமோ அந்த  யக்ஷினி சித்தி கிடைக்கும் வரை தவத்தில் இடைவெளி,தடங்கல் வரகூடாது.

யக்ஷினி த்யாணம் செய்யும் காலத்தில் அந்த யக்ஷிணியை தாய், சகோதரி, மற்றும் நன்பர்கள் உருவத்தில் சிந்த்னை செய்துகொள்ள வேண்டும்.தவறுதலாக கூட அவளை காதலியாகவோ, மனைவியாகவோ எண்ணினால் எண்ணியவர் மிகுந்த தொல்லைக்குள்ளாவர் என்பதில் ஐயம் இல்லை என்பது உறுதி. 

(1)   தனதா ரதிப்ரியா யக்ஷினி. மூல மந்திரம்:

"ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே ஸ்வாஹா//"  

(2)      கனகவதி யக்ஷினி. மூல மந்திரம்:

ஓம் ஆகச்ச கனஹவதி ஸ்வாஹா//"
(3)  சிஞ்சி பிசாசினி யக்ஷினி. மூல மந்திரம்:

ஓம் க்ரிம் சிஞ்சி பிசாசினி ஸ்வாஹா//" 

(4)  சந்திரிகா யக்ஷினி. மூல மந்திரம்:

ஓம்ஹ்ரீம் சந்திரிகே ஹம்ஷ க்லீம் ஸ்வாஹா//" 

(5) அணுராகினி யக்ஷினி. மூல மந்திரம்:

ஓம் ஹிரீம் அணுராகினி மைதுணப்ரியே ஸ்வாஹா//" 

(6)   ஸ்வர்ணரேகா யக்ஷினி. மூல மந்திரம்:

ஓம் சகம் சகம் சால்மல ஸ்வர்ணரேகா ஸ்வாஹா//" 
(7)  கர்ணபிசாஸிணி யக்ஷினி. மூல மந்திரம்:

ஓம்ஹ்ரீம் ச: ச: கம்பலகே கத்வா
பிண்டம் ப்சாசிகே ஸ்வாஹா//" 
(8)  வட யக்ஷினி. மூல மந்திரம்:

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வடவாஸிணியஷகுலப்ரஷாதே
வடயக்ஷினி. யேஹ்யேஹி ஸ்வாஹா//"
(9)   பத்மாவதி யக்ஷினி.மூல மந்திரம்:

ஓம் நமோ பஹவதி தரணீந்ரா பத்மாவதி
ஆகச்ச ஆகச்ச கார்யம் குரு குரு யம்ப்ராத்தயே
தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய
க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு  ஸ்வாஹா//" 

(10)  பண்டார பூர்ணா யக்ஷினி. மூல மந்திரம்:

ஓம்  ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பவாமே நம ஸ்வாஹா//" 
தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய
க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு  ஸ்வாஹா//" 

(11)  பண்டார பூர்ணா யக்ஷினி. மூல மந்திரம்:

ஓம்  ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பவாமே நம ஸ்வாஹா//"

==================================================================

மாந்திரீக பயிற்சி முதல்நிலை பாடம் 6

வராகி சித்தி மூல மந்திரம் பாடம் -6 
ஒவ்வொருவரும் அம்பிகையைப் பூஜை செய்வது பூர்வ புண்ணிய பலத்தினால் வருவது. எதிலும் சக்தியே பிரகாசிக்கிறது. அந்த சக்தியை ஒரு இடத்தில் நிறுத்தி அதனுடைய பேரருளை பக்தி மார்க்கமாக வாராஹி அம்பாள் என்று நினைவில் வைத்து அம்பாளை லயம் செய்து கொள்வதே உபாசனை என்பதாகும். அவ்வாறு தாங்கள் வாராஹியை உபாசித்தால் சகலவிதமான காரியங்களும் நொடியில் சித்தியாகும். ஆதிசக்தியாகிய பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக வாராஹி தேவி அவதரித்தாள். ஆகையால் நாம் வாராஹியை அன்றாடம் வழிபாடு செய்ய வேண்டும்.




குறிப்பு :

1. வாராஹிக்கு ஏற்ற மாலை - செவ்வரளி மாலை.

2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் - செந்தாமரை, வெண் தாமரை.

3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு - தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, பனங்கிழங்கு.

4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் - மரிக்கொழுந்து, கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை.

5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் - வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரி வேர்.

6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்-செவ்வண்ண வஸ்திரம் ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.

7. வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் - கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, முந்திரி உருண்டை இத்துடன் பானகம் முதலியன.

வாராஹியின் நான்கு திருக்கோலங்கள் :

1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி.
2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி.
3. புலி வாகன வாராஹி.
4. வெண் குதிரை வாகன வாராஹி.

இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் தருவதாக சித்தர்களாலும், மந்திர சாஸ்திரங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஜபத்திற்கான மந்திரங்கள்

மந்திரங்கள் சப்த ரூபமாக உள்ளவை. இவை தேவதைகளின் ஸூக்ஷ்ம சரீரம். இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாஸனை, ஜபத்தினால்தான் வலிமை பெறும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம்.

ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.

1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.

 உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.

2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.

3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.

4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.

5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.

6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.

7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.

8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.

9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.

11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.

ஜபத்திற்குரிய இடங்கள்

ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.

சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.

பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.

கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.

சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.

கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.
ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்! ஐம் க்லௌம்
ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி, வாராஹி வராஹமுகி, வராஹமுகி
அந்தே அந்தினி நம:
ருந்தே ருந்தினி நம :
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம்
ஸ்ர்வேஷாம் ஸ்ர்வவாக்
சித்த, சக்ஷர் முககதி
ஜிக்வா, ஸ்தம்பனம் குருகுரு

வராகி  வசியம்

ஐம் - க்லௌம் - ட : ட : ட : ட
ஹும் அஸ்த்ராய பட்
ஓம் அஸ்யஸ்ரீ வாராஹி
மஹா மந்த்ரஸ்ய பகவான்
பைரவ ரிஷித் ருஷ்டிப் ஸந்தவராகி
மஹா சக்தி தேவதா
க்லைம் பீஜம்
க்லாம் சக்தி
க்லூம் கீலகம்
மம ஸ்ரீ வாராஹி
மஹா சக்தி பிரசன்ன
ஸித்தியர்த்தே ஜெபோ விநியோக ஹா!

ஸ்ரீ வாராஹி அஷ்டகம்

தேவி க்ரோடமுகி ந்வதங்ரி கமலத்வத்
த்வானு ரக்தாத்மனே
மஹ்மம் த்ருஹயதயோ மஹேசி மனஸா
காயேன வாசா நர ;
தஸ்யாசு த்வதயோக்ர நிஷ்டுரஹலா
கதா ப்ரபூதவ்யதா
பர்யஸ்யன் மனஸோ பவந்து வபுஷ ;
ப்ராணா ப்ராயாணோன் முகா
தேவி த்வத்பத பத்ம பக்தி விபவ ப்ரஷீனே
துஷ்கர்மணி
ப்ராதுர்பூத ந்ருசபர்ஸ பாவமலினாம்
வ்ருத்திம் விதத்தே மயி
யோ தேஹி புவணேத தீய ஹ்ருதாயாந்
நிர்கத்வரைர் லோஹிதை
ஸத்ய; பூரயஸே கராப்ஐ சஷகம்
வாஞசாபலைர் மாமயி
சண்டோத்துண்ட விதீர்ண துஷ்ட ஹ்ருதய
ப்ரோத்பின்ன ரக்தச்சுடா
ஹாலாபான மதாட்ட ஹாஸநித
தா கோப ப்ரதா போந் கடே,
மாதர் மத் பரிபந்தினா மபஹ்ருதை ;
ப்ரானண ஸத் வதங்ரித்வயம்
த்யானோட்டாமர வைபவோதய வசாத்
ஸந்தர்ப்பயாமி க்ஷணா ;
ச்யாமாம் தாமரஸானனாங்ரி நயனாம்
ஸோமார்த்த ஷடாம் ஜகத்
த்ராண வ்யக்ர ஹலாயு தோக்ர முஸலாம்
ஸந்த்ராஸ முத்ராவதீம்
யேத்வாம் ரக்த கபாலினீம் ஹரவராரோ
ஹேவரா ஹானனாம்
பாவை; ஸந்தத்தே சதப் க்ஷணம்பி
ப்ராணாந்தி தேஷம் த்விஷ
விஸ்வாஸ்தீஸ்வர வல்லபே ஜெயஸேயா
த்வம் நித்யந்த்ரி யாத்மிகா
பூதானாம் புருஷாயு ÷ஷாவதிகரீ
பகா ப்ரதா கர்மணாம்
தர்மயாசே பவதீம் கிமப்யவிதகம்
யோமத் விரோ நீஜன ;
தஸ்யாயர்ம வாஞ் சிதாவதி பவேத்
மாதஸ்தவை வாக்ஞயா
மாதஸ்ஸம்யகு பாஸிதும் ஜடமதி ஸ்திவாம்
நைவ சக்னோம் யஹம்
யத்யப்யன் வித தேசிகாங்ரி கமலானுக் ரோச
பாத் ஸங்கின ;
வாராஹி வ்யத்மான மானஸ களத்
ஸெனக்யம் ஹதாசாபலம்
ஸிதத்தம் தமபாக்ரு தாத்ய வஸிதம் ப்ராப்தா
கிலோத் பாதகம்
கிரந்தத் பந்துஜனம் களங்கித குலம் கண்ட
வரணோத்யத் க்ரியிம்
பச்யாமி ப்ரதிக்ஷமா பதிதம் ப்ராந்தம்
லுடந்தம் முஹு
வாராஹி த்வம்சேஷ ஜந்து ஹீபுன ;
ப்ராணாத்மிகா ஸ்பந்தஸே
சக்திவ்யாபத சராசர கலுய தஸ்த்வாமேத
தப்யர்த்தயே
த்வத பாதாம்புஜ ஸங்கினோமம ஸக்ருத்
பாபம சிகீர் ஷத்தியே
தோஷாம் மாகுரு சங்கரப் பிரியதமே
தேஹாந்தரா வஸ்திதம்

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம்

தேவ்யுவாச :
1. நமோஸ்து தேவி வாராஹி ஐயைகாரஸ்வரூபிணி !
ஜபித்வா பூமிரூபேண நமோ பகவதிப்பரியே!!

2. ஜயக்ரோ டாஸ்து வாராஹி தேவித் வாம்ச நமாம்யஹம்!
ஜய வாராஹிவிஷ் வேஸிமுக்ய வாராஹிதே நம!!

3. ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டாநாம் வாக் ஸ்தம்ப நகரீநம!
நமஸ் ஸ்தம்பிநி ஸ்தம்பே தவாம் ஜ்ரும்பே ஜரும்பிணி தே நம!!

4. முக்யவாரா ஹிவந்தே த்வாம் அந்தே அந்திநி தே நம!
ருந்தே ருந்தேநிவந்தே த்வாம் நமோ தேவீது மோஹி நீ !!

5. ஸ்வபக்தானாம் ஹி ஸர்வேஷாம் ஸர்வகாம ப்ரதே நம!
பாஹ்வோ ஸ்தம்பகரீம் வந்தே சித்தஸ் தம்பிந தே நம!!

6. சக்ஷúஸ் ஸ்தம்பிநி த்வாம் முக்யஸ்தம்பி தே நமோ நம
ஜகத்ஸ்தம்பிநி வந்தே த்வாம் ஜீஹ்வாஸ்தம்பந காரிணி

7. ஸ்தம்பனம் குரு ஸத்ரூணாம் குரு மே ஸத்ருநாஷநம்
ஸீக்ரம் வஸ்யம் ச குரு யோக்நௌ வாசாத்மகேநம

8. டசதுஷ்டயரூபே த்வாம் ஸரணம் ஸர்வதா பஜே
ஹோமாத்ம மகே பட்ரூபேண ஜய ஆத்யாநநேஸிவே

9. தேஹி மே ஸகலான் காமான் வாராஹீ ஜெகதீஸ்வரி
நமஸ்துப்யம், நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம

10. இதம் ஆத்யாநநா ஸ்தோத்ரம் ஸர்வ பாபவிநாஸநம்
படேத்ய ஸர்வதா பக்த்யா பாத கைர் முச்யதே ததா

11. லபந்தே ச ஸத்ரவோ நாஸம் து ; கரோகாபம்ருத்யவ
மஹதாயுஷ்யமாப் நோதி அல க்ஷ் மீர் நாஸமாப்நுயாத்

12. ந பயம் வித்ய தே க்வாபி ஸ்ர்வதா விஜயோ பவேத்
அபீஷ்டார்தான் லபேத் ஸர்வான் ஸரீரீ நாத்ர ஸம்ஸய
(இதி ஸ்ரீருத்ர யாமளே உமா மஹேஸ்வர ஸம்வாதே
ஆதிவாராஹீ ஸ்தோத்ரம் ஸமாப்தம்)
---------------------------------------------------------------------------------------

மாந்திரீக பயிற்சி முதல் நிலை - பாடம் -7

மாந்திரீக பயிற்சி முதல் நிலை - பாடம் -7

அஷ்டமாசக்திகளை தரும் மூலிகைகள் , மந்திரங்கள் , திசைகள் என்னென்ன என்று பார்ப்போம். 

மூலிகையும் மந்த்ரமும் என்னவென்று அறியும் முன் நாம் யோகம் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது ,
ஆகவே இந்த பதிவினில் யோகம் பற்றிய முக்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம் .

யோகமும் , மூலிகையும் , மந்த்ரமும் என்னவென்று பார்ப்போம் .

முதலில் யோகம் . . .

மனித வாழ்வினில் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் நன்மைகள் பெருகி வருவதை நாம் யோகம் என்கிறோம் , காரணம் , நமது எண்ணங்களுக்கும் , செயல்பாட்டிற்கும் மேல் அதிகமாக நன்மைகள் கிடைப்பதால் அதனை நாம் யோகம் என்று சிறப்பித்து கூறுகிறோம்.

ஆனால் இப்போது நாம் சொல்ல இருக்கும் இந்த யோகம் என்பது , மண்ணில் மண்ணாக மறையப்போகும் இந்த மனித உடல், ஒரு பெரிய சாதனையை செய்து , இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ள , வாழ்வதற்கு வர இருக்கின்ற, மனித உயிர்கள் தன்நிலையில் இருந்து உய்யும் பொருட்டு மகரிஷிகளாலும் , யோகிகளாலும் , சித்தர் பெருமக்களாலும் நமக்கு அருளப்பட்டதாகும் .

இந்த யோகம் எதிர்பாராமல் வருவதல்ல , எதிர்பாராமல் வரும் யோகமானது , நமது வாழ்நாளில் வரலாம் , வராமலும் போகலாம்.

ஆனால் இந்த யோகத்தினை பயிற்சியின் வாயிலாக நமக்கு நாமே பெற்றுக் கொள்ளலாம். அதுதான் இந்த யோகத்தின் தனித்தன்மையும் பெருமையுமாகும்.

இதனால் வருகின்ற யோகமானது , எப்பிறப்பிலும் நமது துணையாவதாகும்.
இந்த பயிற்சியினை வாசி யோகம் என்றும், ப்ராணாயாமம் என்றும் , மூச்சு பயிற்சி என்றும் கூறுவார்கள் . ஆனால் மனிதனை தெய்வ நிலை காணச் செய்வதால் இந்த பயிற்சியினை தெய்வநிலை யோகப் பயிற்சி என்பதே சரியாகும்.

இந்த யோகத்திற்கான பயிற்சிக்கு நேரம் காலமும் , உணவு முறையும் மிகவும் முக்யமானதாகும் .

இந்த யோகப்பயிற்சியை முறைப்படுத்தி பூலோக வாசிகளுக்கு அருட்கொடையாக அருளியவர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் ஆவார்கள்.

சாட்சாத் எம்பெருமான் ஆனவர் ஸ்ரீ ஸ்ரீ பார்வதி தேவிக்கு யோகத்தின் அதி சூட்சுமத்தை மனமுவந்து அருளி , தேவியானவர் அதனை பதஞ்சலிக்கும் , வியாக்ரபாதருக்கு அருள்பாலித்து , அதன்பின்னர் அவர்கள் இதற்கு வடிவம் தந்து , பின் அவர்களிடமிருந்து பணிந்து இதனைப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் இதற்கு உரிய பாடல்களையும் , பயிற்சியையும் வகுத்து மனிதர்களின் மேன்மை கருதி உலகறிய அருள் செய்தார்கள் .

பின்னாளில் வந்த பெருமைக்குரிய யோகிகளும் , சித்தர்களும் மனித ஜீவர்கள் பால் பேரன்பு கொண்டு தந்த , சிறப்பு மிக்க அந்த பயிற்சி முறையை எல்லோரும் முறையாக மேற்கொண்டால் வாழ்வில் எல்லா நலமும் , வளமும் அமைதியும், ஆனந்தமும் பெறலாம் .       

யோகப் பயிற்சிக்கு உரிய நேரம் என்னவென்று பார்ப்போம்.

24 நிமிடங்கள் என்பது ஒரு நாழிகை ஆகின்றது ,
2 ½ நாழிகை என்பது 1 மணி நேரம் .
நாளொன்றுக்கு 10 ஜாமம் .
5 ஜாமம் என்பது 12 மணி நேரமாகும் .
10 ஜாமம் என்பது 24 மணி நேரமாகும்
அப்படி என்றால் 24 மணியை ஜாமங்களாக பிரிக்கையில் 2 மணி 24 நிமிடங்கள் என்பது ஒரு ஜாமம் என்றாகின்றது.

முப்பது நாழிகைகளை 6 + 6 ஆக பிரித்தால் 5 ஆக பிரிக்கலாம்
பகற் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.
இராக் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.

இதில் பகல் முப்பது நாழிகையில், பூமியை ……..

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை     (6.00-8.24)    ஆகாயமும்
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    காற்றும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை  (1.12-3.36)     நீரும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை   (3.36-6.00)          நிலமும் ஆளுகின்றன.

இதில் இரவு  முப்பது நாழிகையில், பூமியை……..

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை    (6.00-8.24)     நிலமும்  
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    நீரும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை   (1.12-3.36)         காற்றும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை    (3.36-6.00)    ஆகாயமும் ஆளுகின்றன.
இதில் கதிரவன் உதயத்திற்கு முன் 6 நாழிகையும்

(*சுமாராக காலை 3-30 மணி முதல் 6.00 மணி வரையிலும்)
பின் 6 நாழிகையும் (*சுமாராக காலை 6-00 மணி முதல் 8.24 மணி வரையிலும்)
உள்ள காலமே யோகப் பயிற்சிக்கு உகந்ததாக ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் அருளுகின்றார்.

*(தினசரி சூரிய உதயம் கணித்து இந்த நேரத்தை முறையாக தேர்ந்தெடுக்கலாம்.)
திருமூலர் 3 ம் தந்திரம் , 16 வார சரத்தில்,
திங்கள் , புதன் , வெள்ளியில் மூச்சை இடைநாடி வழியாகவும் ,
செவ்வாய் , சனி , ஞாயிறில் மூச்சை வலது நாடி வழியாகவும் ,
வளர்பிறை வியாழனில்  மூச்சு இடை நாடியிலும்,
தேய்பிறை வியாழனில் மூச்சு வலது நாடியிலும் பயில வேண்டும் என்கிறார்.
மேலும்,

காலையில் யோகம் பயில கபம் நீங்கும்,

நண்பகல் யோகம் பயில கொடிய வாத நோய்கள் தீரும்,
விடியற்காலையில் யோகம் பயில பித்த நோய்கள் அகலும் என்கிறார்.
காற்றினை உள்ளுக்கு இழுப்பது “ பூரகம்” எனப்படுகிறது ,
காற்றினை வெளி விடல்  “ ரேசகம் “ எனப்படுகிறது,
காற்றினை உள் நிறுத்துதல் “ கும்பகம் “ எனப்படுகிறது.
16 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
64 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
32 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் பிராணாயாமம் எனப்படுகின்றது

இந்த முறைக்கு மாறாக வலப்பக்கம் காற்றினை உள்வாங்கி பயிலுதல் “வஞ்சனை” எனப்படும்.

இடைகலை வழியாக 16 மாத்திரை கால அளவு பூரகம் செய்து ,
பிங்கலையில் 32 மாத்திரை கால அளவு இரேசகம் செய்து மீண்டும்
காற்றினை உள்வாங்காமல் 64 மாத்திரை கால அளவு வெளி கும்பகம் செய்ய பல உண்மைகள் தெரியுமாம்.

மாத்திரை கால அளவு என்பது கண் இமைப்போது அல்லது கைந் நொடிப்பொழுது எனப்படுகிறது .

இந்த முறைகள் நன்கு தேர்ந்தவர்களாலேயே செய்யமுடியும்.

மேலும் இவைகளை எல்லாம் தேர்ந்த குருமூலமாகவே பயில வேண்டும்.
ஆரம்ப நிலையில் பயில்பவர்கள் , இதனை 

6 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து
24 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி
12 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் சாத்தியமாகின்றது என்றறிகிறோம் .

எப்படி என்றாலும் நன்றாக தேர்ந்த குருவின் துணை அவசியமாகின்றது . குருவின் துணையின்றி முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடது நாசியை எப்படி மூடி வலது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , கும்பகம் என்பதனை எப்படி செய்வது என்பதையும் , வலது நாசியை எப்படி மூடி இடது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , வெளி கும்பகம் எவ்வாறு செய்வது என்பதனையும் குருவின் அருகாமையில்தான் செய்ய வேண்டும் .

ஏனென்றால் குருவின் துணையின்றி இந்த பயிற்சியில் ஈடுபட்டு தோல்வி காண்பது மட்டுமல்ல , உடல் தொந்திரவுகளும் ஏற்படுவதுண்டு . ( தொந்தி , அடிக்கடி ஏப்பம் , அடிக்கடி அபானன் பிரிதல், சித்த சுவாதீனம் , பார்வை குறைபாடு போன்றவைகள் )

முறையாக பயிற்சியை பயின்றால் இதனுடைய பலன்கள் சொல்லில் அடங்காதது.

காரணம் , மனித முயற்சியினால் செய்ய முடியாத பலவிதமான சாதனைகளையும், சாகசங்களையும் நேர்த்தியாக செய்து முடிக்கலாம் ,ஆனால் பயில்வோரின் மனதில் முழுக்க முழுக்க தன்னலம் கருதாமையும் , மக்கள் நலனும் , உலக நன்மையை கருதும் மனோபாவமும் இருப்பது அவசியமாகும் .
==============================

மாந்திரீக பயிற்சி முதல் நிலை பாடம் -8

மாந்திரீக பயிற்சி முதல் நிலை பாடம் -8



அஷ்ட கர்மங்கள் :

அஷ்ட கர்மாக்களை என்னெவென்று பார்க்கு முன் அதனைப் பற்றிய முழுவிளக்கம் அவசியமாகின்றது , காரணம் ஒரு பயிற்சியின் அல்லது படிப்பின் அவசியமும் , காரணமும் , வரலாறும் தெரிந்தால் அதனை கற்றுக்கொள்ள ஆர்வமும் , கற்றுக் கொண்டே தீரவேண்டும் என்கிற உத்வேகமும் நம்முள் இயல்பாக உருவாகும்.

இப்போது கர்மாக்களை தெரிந்துகொள்ள துவங்குவோம் .

ஒன்று என்பது பிரதமை என்றும்
இரண்டு என்பது துதியை என்றும்
மூன்று என்பது திரிதியை என்றும்
நான்கு என்பது சதுர்த்தி என்றும்
ஐந்து என்பது பஞ்சமி என்றும்
ஆறு என்பது சஷ்டி என்றும்
ஏழு என்பது சப்தமி என்றும்
எட்டு என்பது அஷ்டமி என்றும்
ஒன்பது என்பது நவமி என்றும்
பத்து என்பது தசமி என்றும்
பதினொன்று என்பது ஏகாதசி என்றும்
பனிரெண்டு என்பது துவாதசி என்றும்
பதிமூன்று என்பது திரயோதசி என்றும்
பதினான்கு என்பது சதுர்த்தசி என்றும்
பதினைந்து என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகின்றது.

பொதுவாகவே அமாவாசை ஆண்களையும் , பௌர்ணமி பெண்களையும் அதிகம் தொடர்பு கொண்டுள்ளதாக அறிகிறோம்.
பௌர்ணமியில் நீர்நிலைகளில் பௌர்ணமியின் (குளுமை)ஆதிக்கம் அதிகம் இருப்பதை எல்லோரும் சாதாரணமாக காணலாம் .
அமாவாசை காலங்களில் பெரும்பாலும் மனஅமைதியற்ற(இறுக்கமான)சூழல் காணப்படுவதுண்டு.

ஆனால் ஒரு சில பூஜைக்குரிய துவக்கத்தினை சிலர் இந்நாளில் (அமாவாசையில்) துவக்குவதுண்டு .
இந்த யோகம் தனை ஆண் பெண் என பாகுபாடின்றி யாரும் பயில முடியும் , இதில் ஆணிலும் விட பெண்கள் மிக விரைவாக முன்னேற்றமும் உயர்நிலையை அடைகின்றார்கள் என்பது அனுபவ உண்மை.

காரணம் பெண்கள் இயல்பாகவே பிராண சக்தியின் வடிவமாக உள்ளதுதான். அதனால் அவர்கள் முயன்றால் போதும், அந்த உயர்நிலை அவர்களை தேடி வந்து அடைந்து விடுகிறது .

சரி கர்மாகளுக்கு வருவோம் .   
இந்த கர்மாக்கள் எட்டு என்கிற எண்ணிக்கையில் இருப்பதால் இதனை அஷ்ட கர்மா (எட்டு தொழில்) என்றழைக்கிறோம்.
இவைகள் முழுக்க மனித மனநிலை மேன்மை பெறவே உருவாக்கப்பட்டது . இந்த கர்மாக்களை மிகவும் சிரத்தையாகவும் உள்ளார்ந்த உத்வேகத்தோடும் பயிலுவோர் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்கும் நிலையினை அடைகிறார்கள் என்கிறார் இறைவனார் .

இவ்வளவு சிறப்பினையும் ஒருங்கே பெற்ற இந்த அஷ்டமா சக்திகளின் ஒரு பகுதியான அஷ்ட கர்மாக்கள் என்பது முறையே ,
1. வசியம்
2. மோகனம்
3. உச்சாடனம்
4. ஸ்தம்பனம்
5. ஆகர்ஷனம்
6. வித்துவேடனம்
7. பேதனம்
8. மாரணம்            என்பது ஆகும்

இந்த அஷ்ட கர்மாக்களின் சக்தி மிகுந்த செயல்பாடுகள் என்னென்று பார்ப்போம் .
1. வசியம் என்றால், ஆகர்ஷனம் , மோகனம் , வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும்.
 ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில் , தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது – மேலும் வசியம் செய்தவரின் எண்ணத்தை மீறி வசியம் செய்யப்பட்டவர் எதுவுமே செய்ய முடியாமல் போகின்றது.

2. மோகனம் என்றால், மயக்குவது . தன்னிடம் மயங்கச் செய்வது , தான் சொல்வதை மற்றவர்களை கேட்க செய்வது.

3. உச்சாடனம் என்றால், தனது மந்த்ர சக்தியால் தன்னுடைய நோய் , கடன் , பேய், பிசாசு , பூதம் , எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும் .

4. ஸ்தம்பனம் என்றால், ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார். காற்றை , நீரை , ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம் , நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம். 

5. ஆகர்ஷனம் என்றால், தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள் , மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருள்களையும் , அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம்.  

6. வித்துவேடனம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது , பகைமை உண்டாக்குவது , எது தனக்கு வேண்டாததோ அதனை , தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. ( தன்னிடமுள்ள தீய எண்ணங்கள் , தீய பழக்கங்கள் போன்றவை )

7. பேதனம் என்றால், வேறுபடுத்துவது , பிரிப்பது . (நண்பர்கள் , கணவன் மனைவி , தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும் , மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.

8. மாரணம் என்றால், அழிப்பது, கொல்வது . மனிதர்கள் , தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்ப்பட்டது .
அஷ்டகர்மாக்களை ஒருவர் தனக்காகவும் , பிறருக்காகவும் செய்வதால் இவைகள் கர்மா அதாவது தொழில் எனப்படுகிறது.
  
 =================================================



மாந்திரீக முதல் நிலைப் பயிற்சி பாடம் 9

அஷ்டமா சித்திகளும் அதற்குரிய மூலிகை மந்திரமும் 

நாம் அறிந்து கொள்ள முயலும் இந்த யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பற்றிய பாகத்தை இப்போது காணப் போகின்றோம் .
அஷ்டமா சக்திகளில் ;

அஷ்டமா கர்மாக்களுக்கும் , அஷ்டமா சித்திகளுக்கும் மூலிகைகளின் பங்களிப்பு அதிகம் உள்ளது .
மூலிகை என்றவுடன் இதெல்லாம் எங்கோ வனாந்திர பிரதேசத்தில் கிடைக்கும் தாவரங்கள் என்று எண்ணி கலங்க வேண்டாம் , ஒருசில மூலிகைகளைத் தவிர  மற்றவையெல்லாம் பெரும்பாலும் நம்மைச் சுற்றி வளர்ந்திருக்கும் தாவரங்களின் தொகுப்புதான் .
நம்மை அலைய விட்டு பார்ப்பதில் சித்தர் பெருமக்களுக்கு ஆவலில்லை . நம்மை சோதித்து பார்ப்பார்கள் , அதில் நாம் தேர்ச்சி அடைந்து அவர்களின் அன்பை பெற்று, நமக்கு அருள்பாலிக்க துவங்கி விட்டால் அவர்கள் தருவதை யாராலும் நிறுத்த முடியாது.
ஒரு கர்மாவுக்கு எட்டு மூலிகைகளை ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் அவர்கள் உபதேசிக்கின்றார்.

எட்டு கர்மாக்களுக்கும்  8 X 8 = 64 மூலிகைகள் ஆகின்றன .

இதற்குரிய மூலிகைகளை காண்போம்.

1. வசியம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள் 
இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்
1. சீதேவிச் செங்கழுநீர், 
2.  நில ஊமத்தை,
3. வெள்ளை விஷ்ணுகிரந்தி
4. கருஞ்செம்பை,
5. வெள்ளை குன்றி மணி,
 6. பொன்னாங்கன்னி,
7. செந்நாயுருவி, 
8. வெள்ளெருக்கு என்பதாகும் .
இதில் வெவ்வொரு விதமான வசியங்கள் உண்டு .

 இராஜ வசியத்திற்கு – சீதேவி செங்கழுநீர்,
 பெண் வசியத்திற்கு – நிலவூமத்தையும்,
 லோக வசியத்திற்கு – வெள்ளெருக்கும்,
ஜன வசியத்திற்கு – கருஞ்செம்பை,
 விஷ்ணுகிராந்தியும்,

விலங்கு வசியத்திற்கு – வெள்ளை குன்றி மணியும்,
தேவ வசியத்திற்கு – பொனனாங்கன்னியும்,
சாபம், வழக்குகள் ஜெய வசியத்திற்கு – செந்நாயுருவியும்
பங்கு வகிக்கின்றன.

2. மோகனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்
இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்
1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர்,
3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு,
5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது,
7. நன்னாரி, 8. கிராம்பு என்பதாகும்.
இதில் வெவ்வொரு விதமான மோகனங்கள் உண்டு .

 பெண்களை மோகனம்  செய்ய – பொன்னூமத்தையும் ,
 பொதுமக்களை மோகனம்  செய்ய - கஞ்சா வேரும்,
 உலகத்தை மோகனம்  செய்ய - வெண்ணூமத்தையும்,
 விலங்குகளை மோகனம்  செய்ய - கோரைக்கிழங்கும்,  
 தேவதைகளை மோகனம்  செய்ய - மருளூமத்தையும்,
 அரசர்களை மோகனம்  செய்ய -  ஆலம்விழுதும்,
 மனிதர்களை மோகனம்  செய்ய  -  கிராம்பும்,
 எல்லாவற்றையும் மோகனம்  செய்ய - நன்னாரியும்.
பங்கு வகிக்கின்றன

3. உச்சாடனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்
இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்
1. பேய் மிரட்டி,  2. மான்செவிக் கள்ளி,
3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை,
5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி,
7. பிரமதண்டு, 8. புல்லுருவி என்பதாகும்.
இதில் வெவ்வேறு விதமான உச்சாடனங்கள் உண்டு .
பிறர் நமக்கு செய்யும் தீமைகளை விரட்ட – பிரமதண்டும்.
மிருகங்களை விரட்ட – பேய்மிரட்டியும்.
எதிரிகளை விரட்ட – மான்செவிக் கள்ளியும்.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட – தேள்கொடுக்கியும்.
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட – கொட்டைகரந்தையும்.
கால்நடைகளை விரட்ட – வெள்ளை கண்டங்கத்தரியும்.
 பூத பைசாசங்களை விரட்ட – மருதோன்றி, புல்லுருவியும்
பங்கு வகிக்கின்றன.

4. ஸ்தம்பனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்
இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்
1.  கட்டுக்கொடி, 2.  பால்புரண்டி,
3.  பரட்டை, 4. நீர்முள்ளி,
5. நத்தைச்சூரி, 6.  சத்தி சாரணை,
7. பூமி சர்க்கரைகிழங்கு ,8. குதிரைவாலி  என்பதாகும்.
இதில் வெவ்வேறு வகையான ஸ்தம்பனங்கள் உண்டு.

 தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர  - கட்டுக்கொடியும்,
 பெண்களின் முலைபாலை கட்ட – பால்புரண்டியும்,
 வயிற்றுப் போக்கை நிறுத்த  - பரட்டையும்,
 கற்களை கறைக்க – நத்தைச்சூரியும்
 செயல்களை செயல்படாமல் கட்ட – சத்திசாரணையும்,
திரவத்தை கட்டி திடமாக்க  - பூமி சர்க்கரை கிழங்கும்,
                        விந்துவை  கட்ட – கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளியும்,
கருப்பையில் உள்ள கருவை கட்ட – குதிரைவாலியும்
பங்கு வகிக்கின்றன  

5. ஆகர்ஷனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்
இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்
1. தூதுவளை, 2. உள்ளொட்டி,
3. புறவொட்டி, 4.சிறு முன்னை,
5. குப்பைமேனி, 6. அழுகண்ணி,
7. சிறியாநங்கை, 8. எருக்கு என்பதாகும்.
இதில் பல்வேறு ஆகர்ஷனங்கள் உள்ளன
        மிருகங்களை ஆகர்ஷிப்பதற்கு – தூதுவளை, குப்பைமேனியும்,
 பெண்களை ஆகர்ஷிப்பதற்கு -  உள்ளொட்டி, அழுகண்ணியும்,
 அரசர், பிரபுக்ளை ஆகர்ஷிப்பதற்கு – சிறுமுன்னையும்,
 துர்தேவதைகளை ஆகர்ஷிப்பதற்கு – புறவொட்டியும,
 தேவதைகளை ஆகர்ஷிப்பதற்கு – எருக்கும்,
அனைத்து ஆகர்ஷிப்பதற்கு – சிறியாநங்கையும்
பங்கு வகிக்கின்றன

6. வித்துவேடனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்
இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்
1. கருங்காக்கணம், 2. வெள்ளை காக்கணம்,
3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை,
5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி,
7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு என்பதாகும்.
இதில் பலவகையான வித்துவேடனங்கள் உண்டு .

 கொள்ளையர்களுக்குள் பகை உண்டாக்க – கருங்காக்கணமும்,
 தேவர்களுக்கு மனிதர்கள் பாலுள்ள கோபம் நீக்க –
 வெள்ளைக் காக்கணம், திருகுகள்ளியும்,
பூத, பைசாசங்களுக்குள் பகை உண்டாக்க – ஆடுதின்னாபாளையும்,
மனிதர்களுக்கு உண்டான நோய் நீக்க  -  பூனைக்காலியும்,
எதிரிகளால் உண்டாகும்  ஆபத்தை  தடுக்க – கீழாநெல்லியும்,
விஷ உணவை உண்ணாமல் செய்ய – சிற்றாமணக்கும்
பங்கு வகிக்கின்றன .

7. பேதனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்
இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்.
1. வட்டதுத்தி, 2. செம்பசலை,
3. மாவிலங்கு, 4. பாதிரி,
5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி,
7. சங்கன் வேர், 8. ஆகாயதாமரை என்பதாகும்.
இதில் பலவகையான பேதனங்கள் உண்டு .

 நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க – வட்டதுத்தியும் ,
 மனிதனின் தீய எண்ணத்தை பேதிக்க – செம் பசலையும்,
 பூத, பிசாசுகளை பேதிக்க – மாவிலங்கு, பாதிரியும்,
 துர்தேவதைகளை பேதிக்க – கோழி அவரைக்கொடியும்,
 எதிரிகளை பேதிக்க – சீந்தில்கொடியும்,
 பெண்களை பேதிக்க – சங்கன் வேரும்,
 வியாதிகளை பேதிக்க – ஆகாயத் தாமரையும்
பங்கு வகிக்கின்றன.

8. மாரணம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்
இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்.
1. நச்சுப்புல், 2. நீர்விஷம்,
3. சித்திரமூலம், 4. அம்மான் பச்சரிசி,
5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி,
7. காஞ்செறிவேர் , 8. நாவி  ஆகும்.
இதில் பலவகையான மாரணங்கள் உண்டு

 மனிதர்களை மாரணம் செய்ய – நச்சுப்புல், நீர்விஷமும்,
 வியாதிகளை மாரணம் செய்ய  - சித்திரமூலம், காஞ்செறிவேரும்,
 கண்ணாடிகளை உடைக்க – அம்மான் பச்சரிசியும்,
 மிருகங்களை  மாரணம் செய்ய – மருதோன்றி, கார்த்திகை கிழங்கும் பங்கு வகிக்கின்றன.

ஒரு சில நன்மைகளை கருத்தில் கொண்டு அனைத்து மூலிகைகளின் வேறு பெயர்கள் இங்கே தரப்படவில்லை .

இந்த குறிப்பிட்ட மூலிகைகளுக்கும் , அதன் தொடர்பான கர்மாக்களுக்கும் மிகுந்த இசைவு உள்ளதை அரும்பாடுபட்டு கடுமையான விரத ,அனுஷ்டானங்களை , பயிற்சியை செய்து மகரிஷிகளும் , சித்தர்பெருமக்களும் ,ஞானிகளும் கண்டறிந்து உலகிற்கு மனிதர்களின் நன்மையை கருதி அருள் செய்திருக்கின்றார்கள் .

இவைகளை அவர்களின் நோக்கத்தினை ஒட்டியே அதாவது சக மனிதரை இம்சிக்காமல் எல்லோரையும் தன்னைப்போலவே எண்ணி எல்லோருக்கும் நன்மைகளை செய்யும் பொருட்டு பயன்படுத்தினால் இப்பிறவி மட்டுமல்ல எப்பிறவியிலும் க்ஷேமமாக வாழலாம் .

பிற உயிர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் சங்கடம் ஏற்படுத்தினாலும் மனிதரது இப்பிறவி மட்டுமல்ல எப்பிறவியிலும் பிறந்து எல்லோராலும் இகழ்ந்து பேசப்படும் பிறப்பாகி அல்லல்பட நேரிடும் என்பதை மறக்க வேண்டாம் .

இப்பிறப்பின் பேரிடர் நீக்க உருவான இந்த கலைதனை சக மனிதர்களின் வாழ்வின் நன்மைகளை கருதியே இங்கே விரிவாக பதிவிடுகின்றோம்.
இதனை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தி , இப்பிறவியையும் வரும் பிறவிகளையும் துக்க சாகரத்தில் (துயர கடலில்) மூழ்கடித்துக் கொள்ள வேண்டாமென பரிவுடன் , உரிமையாக , அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
இந்த மூலிகைகளை நாம் கண்டவுடன் பறிக்கலாகாது , அதற்குரிய சாப நிவர்த்தி மந்த்ரங்களை சொல்லிய பின்தான் எடுக்கவேண்டும்.

தவறான சிந்தையுள்ள மனிதர்களின் கையில் இவைகள் கிடைத்தால் அவர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புண்டு என்பதால் மகரிஷிகளும் ,சித்தர்களும் , ஞானிகளும் இவை சம்பந்தமான அனைத்தையும் மறை பொருளாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

நற்குணம் , நல்லெண்ணம் , பரோபகார சிந்தையும் உள்ளவர்கள் , லோக க்ஷேமம் கருதி தேடினால் இந்த மூலிகைகள் தன்னைத்தானே வெளிப்படுத்தும் என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியபெருமான் அவர்கள்.

============================================================

மாந்திரீக முதல் நிலை பயிற்சி பாடம் -10

மூலிகையும் அதன் மந்திரங்களும் 


நாம் அறிந்து கொள்ள முற்படும் யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பயன்படுத்தும் விதம் பற்றிய பாகத்தை காணப் போகின்றோம்.
அதற்கு முன் . . . .
நண்பர்களின் மேலான கவனத்திற்கு . .

இந்த தொடரின் மூலமாக அடியேனிடமுள்ள (?) மூலிகைகளை விற்கவோ , அடியேனுக்கு தெரிந்தவர்களிடமுள்ள மூலிகைகளை விற்கவோ, அடியேனுக்கு தெரிந்தவர்களை அறிமுகப்படுத்தி வியாபாரம் செய்யவோ அல்லது அடியேன் யோகம் கற்று தருவதற்காக சீடர்களை என்னிடம் வரவழைப்பதற்காகவோ முயற்சிப்பதாக தயவு செய்து எண்ண வேண்டாம்.

இந்த கட்டுரையின் உள்நோக்கம் – இந்த தெய்வீக கலையின் அதியற்புத மேன்மைதனை உணரும் அன்பர்கள் இந்த தெய்வீக கலையின்பால் ஈர்க்கப்பட்டு இதனை கற்க முற்பட்டுவார்கள். அதனால் அவர்கள் நல்லதொரு குருவை தேடி அடைவார்கள். இந்த கலையினை உயிரென கற்று தேர்வார்கள் .


அதன்பயனாக அவர்கள் வாழும் ஊர் சிறப்புறும் , ஒரு ஊர் சிறப்புற்றால் , ஒரு நகரம் சிறப்புறும் , ஒரு நகரம் சிறப்புற்றால் , ஒரு மாநிலம் சிறப்புறும் , ஒரு மாநிலம் சிறப்புற்றால் , ஒரு நாடு சிறப்புறும் , ஒரு நாடு  சிறப்புற்றால் படிப்படியாக இந்த உலகமே அற்புத மாற்றம் காணும் என்கிற பேராசையினால்இந்த கலையின் மிக உள்ளார்ந்த சூட்சும ரகசியங்களைத் தவிர்த்து மற்றதை இங்கே பதிவிடுகின்றேன் .


இதுவரை இவ்வளவு விரிவாக யாரும் எழுதவில்லை என்பது
உங்களுக்கே தெரியும் .
காரணம் , அந்த அதி சூட்சும ரகசியங்களை மகாகுருவானவர் தொட்டு உணர்த்துவார், தழுவி உணர்த்துவார், பார்த்து உணர்த்துவார்.

இதனை இராமாயணத்தில் மகா குரு ஸ்ரீ ஸ்ரீ வால்மீகியானவர் ,
ஸ்ரீ ஸ்ரீ ராமர் பெருமான் மூலமாக ,
பார்த்து உணர்த்தியது – சீதைக்கு (நயன தீக்கை),
தொட்டு உணர்த்தியது – அகலிகைக்கு (ஸ்பரிச தீக்கை),
தழுவி உணர்த்தியது – குகனுக்கு (ஆலிங்கன தீக்கை) என மூன்று நிலைகளை உலகிற்கு அருளிச் செய்தார்கள்

அது ஒவ்வொருவர் தேக ஆரோக்கியம் மற்றும் பயிற்சியின் நிலைகளை பொறுத்து அமைகிறது .
இந்த தெய்வீக கலையின் உள்ளார்ந்த சூட்சும நிலைகள் அனைத்தும் ஸ்தூல தேகத்தின் உள் நிலையையே சார்ந்து இருப்பதால், ஸ்தூல தேகத்தினை முழுமையாக ஆராய்ந்தே பயிற்சியின் முதிர்வு வெளிப்படுகிறது .
ஆதலால் பயிற்சியினை மேற்கொள்ளும் மாணாக்கர்கள் ஸ்தூல தேகத்தினை முழுமையான சுத்தத்துடன் பராமரித்தல் மேலதிக அவசியமாகின்றது . எண்ணங்களில் தூய்மையும் , பக்தியும் , சாந்தமும் மிக அவசியம்.

கோபம் , காமம் , போதை வஸ்துகள், எரிச்சலடையும் தன்மை, முன் கோபம் ,

முரட்டு குணம் , எதிர்வாதம் , முரண்வாதம் , காழ்ப்புணர்ச்சியுடன் சமயம் பார்த்து இருத்தல் , உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழ்தல் , மறைவாக தவறு செய்தல் , பெண்களை பயமுறுத்தி உறவு கொள்ளுதல் , நைசாக பேசி உறவு கொள்ளுதல் , தன்னிடம் மகாசக்தி இருப்பதாக சொல்லி உறவு கொள்ளுதல் , பிற பெண்களுடன் வைத்துக்கொள்ளும் தவறான உறவுகள் போன்ற பழக்க , வழக்க , குணங்களை அறவே கலைந்திடல் வேண்டும்.       ( இதுவரை இருந்தால் ).

இது போன்ற தவறான பழக்கங்களுடன் இந்த தெய்வீக கலையை பயில்வோர் , தீர்க்க முடியாத தோஷங்களோடும் , குலத்திற்கே நாசம் விளைவிக்கும் பிள்ளைகளை பெற்றும், வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மரணம் வந்தால் போதும் என்று எண்ணும் எண்ணத்துடனே வாழ்வார்கள்.

மேலும் சொப்பனஸ்கலிதம் (உறக்கத்தில் விந்து வெளியேறுதல்) ,
தவறான தனது செய்கைகள் வாயிலாக விந்துவை வெளியேற்றுதல் போன்றவை மாணாக்கனின் உயர்வு நிலையின் எல்லா வழிகளையும் மூடிவிடும்.

பழமொழி : விந்து விட்டவன் நொந்து கெட்டான் .

காம எண்ணங்களையும் , காம எழுச்சியை தூண்டும் காட்சிகளையும் , காமத்தை தூண்டும் விதமான பேச்சுகளையும் அறவே தவிர்க்கவேண்டும். அது போன்ற எண்ணங்களை பேசி உருவாக்கும் நண்பர்களிடமிருந்து விலகுங்கள்.
இவை கொஞ்சமே , இதனைப் போல இன்னும் பல நுணுக்கமான உள்ளார்ந்த ரகசிய அறிவுறுத்தல்கள் உள்ளது .

இதனை ஒரு குரு உடனிருந்து கற்றுத் தருதல் அவசியம்.
குரு வேண்டும் என்று சொல்வது அதற்குதான்.

மேலும் இது இன்ஸ்டன்ட் காலம், அதைப்போல இன்று துவங்கி நாளை உங்களிடம் மாற்றங்கள் தோன்றாது , மெல்ல மெல்லதான் எல்லாம் மாறும் பொறுமையும் , விடாமுயற்சியும் , தீவிர பயிற்சியும் மிக அவசியம் .
இன்றைய காலச் சூழலில் ஏதோ ஒரு வகையில் சுயமாக பாதிக்கப்பட்டவர்கள், இதனை கற்றுக்கொண்டோ அல்லது இதனை கற்றவர் மூலமாகவோ தனது எதிர்ப்பாளர்களை (விரோதிகளை) அது , மனைவி, மகள், மகன், அப்பா, அம்மா சகோதர , சகோதரி என தனது உற்றார் உறவினருக்கு , நண்பர்களுக்கு அல்லது வேறு நபருக்கு ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தல் தர எண்ணுகிறார்கள் என்பது சிலநாட்களாக அடியேனுக்கு வருகின்ற மெயில் மூலமும், கைப்பேசி அழைப்பிலும் தெரிகிறது .
இதன்மூலம் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வியாபாரம் செய்ய முயற்சிக்கவில்லை , என்னை நேரில் சந்திப்பதாலோ , தொலைபேசியில் தொடர்பு கொள்வதாலோ எந்த பயனும் இல்லை . எதனையும் அடியேன் யாருக்கும் சொல்லித்தர இயலாது.
வழியை காட்டுகிறேன் பிடித்து கொண்டு முன்னேறுங்கள் , அடியேனையே குருவாக இருந்து எனக்கு மட்டுமாவது சொல்லிக் கொடுங்கள் என்பது போன்ற வாசகங்கள் பேசவேண்டாம் .
இதனை படித்து இதன் தெய்வீக தன்மையை புரிந்து இந்த அதியற்புத தெய்வீக கலையை நன்கு உணர்ந்து இதனை பயிலுங்கள் , உயருங்கள் , நீங்கள் உயரவேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
ஸ்படிகம் போன்ற தெளிந்த மனமும், தீவிரமான பயிற்சியும் ஒரு தெய்வீக குருவை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் . குருவே உங்களை தேடி வரும்வரை பயிற்சியில் இருங்கள் .

ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே,

இந்த தெய்வீக கலையின் அருமையை தெரிந்து , முழுமையாக யோகப்பயிற்சி பெற்றவர்கள் , அதனை உயிர் மூச்சென உணர்ந்தவர்கள் , யாருக்கும் எந்தவிதமான மந்த்ர துஷ்ப்ரயோகமும் செய்ய முன் வரமாட்டார்கள். அப்படி வருபவர்கள் கலையை முழுமையை அறியாதவர்களாகவே இருக்கமுடியும் , அவர்களால் உங்கள் அபிலாஷையை நிறைவேற்ற முடியாது , ஆனால் முடித்து தருவதாக சொல்லிச் சொல்லி உங்களின் பணத்தை வாங்கிக் கொள்வார்கள் . கடைசியாக ஏதாவது ஒரு காரணம் சொல்லி முடியாது என்பார்கள்.
( முக்கியமாக நீங்கள் செய்த ஏதாவது காரியம் ஒன்றை சொல்லி அதுதான் காரணம் என்று கூறுவார்கள், பழியை உங்கள் மேலேயே போட்டு விடுவார்கள் , நீங்களும் செய்ய சொன்ன வேலை தப்பானது என்பதால் இதனை யாரிடமும் சொல்லமாட்டீர்கள், இப்படித்தான் இன்றைய சித்தும் , யோகமும் போகின்றது ) அடியேனிடம் கேட்பவர்களின் எண்ணமும் இப்படித்தான் இருக்கின்றது .
யோகமும், சித்தும், மந்த்ரமும் , மாந்த்ரீகமும் நம் நலனுக்காக இறைவனால் உருவாக்கப்பட்டதேயன்றி பிறருக்கு தொல்லை கொடுக்க அல்ல என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.

“ இன்றைய விதைப்பு நாளைய அறுவடை என்பதை
எப்போதும் , எந்த நிலையிலும் மறக்கவேண்டாம் ”
பணத்திற்காக பிறருக்கு தொல்லை தருபவர்கள் மிக மோசமான மறுபிறவிக்கு இன்றே பதிவு செய்கிறார்கள் என்பதனை மறக்க வேண்டாம். ஆகவே தவறான சிந்தனையை கனவிலும் எண்ண வேண்டாம் . உங்கள் வாழ்வு சிறக்கவே இவ்வளவும் எழுதுகிறேன் , அடுத்த பதிவினில் மூலிகை பற்றிய தொடர்ச்சியை காணலாம் .
---------------------------------------------------------------------------

மாந்திரீக முதல் நிலை பயிற்சி பாடம்- 11

அதி ரகசிய மாந்திரீக மூலிகை வித்தை 
நாம் அறிந்து கொள்ள முற்படும் யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பயன்படுத்தும் விதம் பற்றிய பாகத்தை காணப் போகின்றோம்.

 சென்ற பதிவின் இறுதியில் நாம் கண்டது . . . .

“ஒவ்வொரு மூலிகைக்கும் அதனை நாம் எடுத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட நாளும் , நட்சத்திரமும், மந்திரமும் உண்டு .
 மூலிகை சாபம் நீக்கவும் , எடுக்கவும் என்ன செய்ய வேண்டும் , எப்போது செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் என்பதனை விரிவாக பார்ப்போம். “ . . .

ஸ்ரீ ஸ்ரீ மகா குருவான கருவூரார் மூலிகைகளையும் `அதற்குரிய மந்த்ரங்களையும் தெளிவாக குறிப்பிடுகின்றார்.
அவையாவன :

 வசிய மூலிகையில் ஒன்றான சீதாதேவி செங்கழுநீர் எனும் மூலிகையை பறிக்கும் முன் “ஓம் ஸ்ரீம் லட்சுமி தேவி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 வசிய மூலிகையில் ஒன்றான பொன்னூமத்தை எனும் மூலிகையை பறிக்கும் முன் “கிறீணி வருணியாரே மதர்நாமி சீவி வசியம் பவ் வே  “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 வசிய மூலிகையில் ஒன்றான கரும் செம்பை எனும் மூலிகையை பறிக்கும் முன் அதற்கு தாமரை அல்லது கற்றாழை நூலில் காப்புக்கட்டி பூஜைகள் செய்து “ஓம் ஓம் சியாமள ரூபி சாம்பவி கிறீங்கி விலிங் கிறிஞ்சாதகி “ என்ற மந்திரம் உருவேற்றி மூன்றாம் நாள் அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 வசிய மூலிகையில் ஒன்றான வெண் குன்றிமணிக் கொடி எனும் மூலிகையை பறிக்கும் முன் அமாவாசையன்று காப்புக்கட்டி பூஜை செய்து “வம்மம் வசவிச நிறை மிருக வசீகரி ஓம் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 வசிய மூலிகையில் ஒன்றான மஞ்சள் கரிசலாங்கண்ணி எனும் மூலிகையை பறிக்கும் முன் ஒரு வெள்ளிக்கிழமையன்று காப்புக்கட்டி மறு வெள்ளிகிழமை     “ ஓம் கிலியுஞ் சவ்வு மஹி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 ******
 மோகன மூலிகையில் ஒன்றான வெண் ஊமத்தை எனும் மூலிகையின் இலையை  பறிக்கும் முன் “ மா இதான் மத்தம் தொன்மத்தி ஓம் ஆம் இலீஞ் சத்திசன மோகினி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 மோகன மூலிகையில் ஒன்றான மருளுமத்தை எனும் மூலிகையை  பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 மோகன மூலிகையில் ஒன்றான ஆலம் விழுது எனும் மூலிகையை  பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 ******
 உச்சாடன மூலிகையில் ஒன்றான நரி மிரட்டி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு வியாழனன்று காப்புக்கட்டி “ சடாய் சடாய் தும்ம சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .
 உச்சாடன மூலிகையில் ஒன்றான மான் செவி கள்ளி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு மன மகிழ்வுடன் வாசனை மலர்கள் தூவி தூபமிட்டு , தீபம் காட்டி  “ அருணகிரி ஆங்கார சத்தி சத்தி தாய் உச்சாடி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 உச்சாடன மூலிகையில் ஒன்றான ஆரண முரி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ ஓம் கோர கோர ரூபி மாயி சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 *******
ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான கட்டுக் கொடி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ சீலிகிளால் பேத்துலால் பேத்து சிவசிவா“ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜலஸ்தம்பனம்)

 ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான பால்பிரண்டி (பாற் குரண்டி)  எனும் மூலிகையை  பறிக்கும் முன் ,  “ நீலகண்டி விசைய விசைய உயர்திற அத்திற் அகலந் தோபா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(சுக்லஸ்தம்பனம்) 

 ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான நத்தை சூரி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ ஓம் வச்சிர ரூபி சூரி சூரிம, காவீரி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜெயஸ்தம்பனம்) 

 *******
ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறு முன்னை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ சர்வ ஆகமுஷ்ணி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

 ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறியா நங்கை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு கரி நாளில் காப்புகட்டி ,  “ சர்வ பிசாகர்ஷனி சர்வ மோகினி சூழ் கிருஷ்ணி வா வா  “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

 ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான அழுகண்ணி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி ,  “ சர்வ சித்த மோகினி , சர்வா கிருஷ்ணி சாம்பஷ சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

 *******
 பேதனம் மூலிகையில் ஒன்றான கோழியவரை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி சித்திரை நட்சத்திரத்தன்று  “ அரி அர தேவி , பிரம தேவி சர்வ தேவியே தீர் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான செம்பசலை கீரை எனும் மூலிகையை  திருவாதிரை அன்று காப்பு கட்டி,  “ சீறியுங்  கீறியுங் சீறியும் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான கீழாநெல்லி எனும் மூலிகையை  புதன் கிழமை  அன்று காப்பு கட்டி வியாழன் அன்று தேங்காய் உடைத்து அளமை பெறும் ,       “ பூமி வித்தேஷணி அஞ்சணி மூலி சகல சர்வ பழமை பல பதார்த்தத் தெரிய சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும். 

*******
மாரணம் மூலிகையில் ஒன்றான கார்த்திகை கிழங்கு எனும் மூலிகையை  கார்த்திகை நட்சத்திரத்தன்று மஞ்சள் நூல் காப்பு கட்டி ஆடு பலி கொடுத்து ,      “ சரவணபவா நமா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

மாரணம் மூலிகையில் ஒன்றான காஞ் சொறி வேர் எனும் மூலிகையை  பௌர்ணமிக்குப் பின் வரும் முதல் திதியில் காப்பு கட்டி மறுநாள் மத்தியானம்  அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து நீரில் ஆட்டி சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (மந்திரமில்லை)

 மாரணம் மூலிகையில் ஒன்றான நச்சுப்புல் எனும் மூலிகையை  மன மகிழ்வுடன்  பூஜை செய்து காப்பு கட்டி , “ விருகனீ விஷதரி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

சில காரணங்களுக்காக எல்லாவித  மூலிகைகளுக்கும் மந்திரங்கள் சொல்லப் படவில்லை.

முழு விபரமும் அறியவும் , பயன்படுத்தும் முறை தெரியவும்,  தகுந்த குரு வேண்டும்.
பயிற்சியில் முழுமை கண்டால் குருவே உங்களை வந்தடைவார் .
 ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய கிழமைகளை சொல்லும் போது …

 வசியம் – ஞாயிறு , மோஹனம் – திங்கள் , பேதனம் – செவ்வாய் , ஸ்தம்பனம் – புதன் , உச்சாடனம் – வியாழன் , ஆக்ருஷ்ணம் – வெள்ளி , மாரணம் – சனி உகந்ததென்கிறார்.

 ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய திக்குகளை குறிப்பிடும் போது …

 வசியம் – கிழக்கு , மோகனம் – வடக்கு  , பேதனம்  - வடகிழக்கு , ஸ்தம்பனம் – தென்மேற்கு , உச்சாடனம் – வடமேற்கு , ஆக்ருஷ்னம் – மேற்கு , மாரணம் – தெற்கு என உபதேசிக்கின்றார்.

 •         மேலும் எல்லாவித கர்மங்களுக்கும் ஈசான்யம் சிறந்ததெனவும் அருள்பாலிக்கின்றார். 

 தீபங்களையும் , மந்த்ரங்களையும் குறிப்பிடும்போது :

 கிழமை : ஞாயிறு , வஸ்திரம் : சிவப்பு பட்டு , திசை : கிழக்கு நோக்கி  வில்வ மரப் பலகையில் அமர்ந்து , திரி : தாமரை நூல் ,நெய் : காராம் பசு (கருத்த நிற முள்ள பசு ) நெய் : தீபம் ஏற்றி யநமசிவ என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய வசியம் சித்திக்கும் . 
கிழமை : திங்கள்  , வஸ்திரம் : மஞ்சள் பட்டு , திசை : வடக்கு நோக்கி  மான் தோலில் அமர்ந்து , திரி : கன்னி நூல் , எண்ணை : நல்லெண்ணெய் : தீபம் ஏற்றி மசிவயந என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு சொல்லி முறைகள் ஜபம் செய்ய மோகனம் சித்திக்கும் .

கிழமை : செவ்வாய் , வஸ்திரம் : சாதாரண வெள்ளை  , திசை : வடகிழக்கு நோக்கி  பளிங்கு கல்லினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து , திரி : கந்தல் துணி  , எண்ணை : புன்னை எண்ணை : தீபம் ஏற்றி யவசிநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய பேதனம் சித்திக்கும் .

 கிழமை : புதன் , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : தென்மேற்கு நோக்கி  ஆல மர பலகையில் அமர்ந்து , திரி : எவ்விதமான திரியும் , எண்ணை : ஆதளைக் கொட்டை  எண்ணை : தீபம் ஏற்றி நமசிவய என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய ஸ்தம்பனம் சித்திக்கும் .
 கிழமை : வியாழன் , வஸ்திரம் : பச்சை பட்டு  , திசை : வடமேற்கு நோக்கி பலா மர பலகையில் அமர்ந்து , திரி : இலவம்பஞ்சு , எண்ணை : புங்க எண்ணை : தீபம் ஏற்றி வயநமசி என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய உச்சாடனம் சித்திக்கும் .

 கிழமை : வெள்ளி , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : மேற்கு நோக்கி  சண்பக மர பலகையில் அமர்ந்து , திரி : வெள்ளெருக்கு நார் , எண்ணை : ஏரண்டத்தெண்ணை : தீபம் ஏற்றி வசியநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய ஆக்ருஷ்ணம் சித்திக்கும் .

கிழமை : சனி , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : தெற்கு நோக்கி  அத்தி மரத்தால் ஆன பலகையில் அமர்ந்து , திரி : வேலிப்பருத்தி , எண்ணை : வேப்ப எண்ணை : தீபம் ஏற்றி யசிவநம என்ற மந்த்ரத்தை லட்சத்திஎட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய மாரணம் சித்திக்கும்.

 சில சூட்சும வார்த்தை விளக்கங்கள் :

கன்னி நூல் காப்பு கட்டி  என்பது தாமரை மொட்டு உள்ள (பூ பூக்கும் முன் )  தண்டினை எடுத்து அதிலிருந்து எடுக்கும் (மகரந்த இழை) நூலினால் குறிப்பிட்ட மூலிகையில் மூன்று முறை சுற்றுவது .

மஞ்சள் நூலால் காப்பு கட்டி என்றால் விரலி மஞ்சளை முனை முறியாமல் எடுத்து அறைத்து , அதில் மேற்படி கன்னி நூலை புரட்டி எடுத்து  பின்னர் உலர்த்தி வைத்துக் கொண்டு பயன்படுத்துவதாகும்.
 பொதுவான மூலிகை சாப விமோசன மந்திரம் .

  ”ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாசய நாசய, சித்தர் சாபம் நாசய நாசய , தேவ முனி , அசுர முனி சாபம் நாசய நாசய, ஸர்வ ஸர்ப்ப சாபம் நாசய நாசய ஹூம்பட் ஸ்வாஹா , என்பதாகும்.

 அன்பிற்குரிய நண்பர்களே ,

 யோகமும், சித்தும், மந்த்ரமும் , மாந்த்ரீகமும் நம் நலனுக்காக இறைவனால் உருவாக்கப்பட்டதேயன்றி பிறருக்கு தொல்லை கொடுக்க அல்ல என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.