அனைவரும். நன்றி. .ஶ்ரீ வாரகிழூகி அம்மன் துணை.    என்னை தொடர் கொள்ள போது .

தங்கள் பெயர் ,தேதி ,பிறந்த ஊர்,  தங்கள் பிரச்சனை அல்லது ஆன்மிக / சந்தேகத்தை என்ன என்பதை  தெளிவாக அனுப்பவும் .  

                   அன்னையின் அருள் ழுலமாக மாந்திரீக தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு.          


                              தொழில் , வியாபாரம் , படிப்பு , குழந்தை பாக்யம் , கணவன் மனைவி பிரச்சினைகள் , கடன்பிரச்சினைகள் , வீடு , மனை விற்க வேலை இல்லாத நிலை , தொழில் தடை , திருமண தடை , எதிரிகள் தொல்லை , செய்வினை கோளாறு என உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தாந்ரீக பரிகாரங்கள் , யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்
நல்லது செய்ய மட்டுமே அனுகவும்.

மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு இங்கு இடம் இல்லை
வாழ்க வளமுடன்.




  • ஒம் நமசிவாய பம் சிம்மவாகினி வாராகி  பாஹிமாம் 
அன்னையின் அருள் ழுலமாக மாந்திரீக தாந்ரீக ழுறை மூலம். தொழில் வசியம், கணவன் மணைவி சண்டை விலக யந்திரம்  , ஜன வசிய யந்திரம், துஷ்ட சக்தி விலக அஷ்ட திக்கு காக்கும் யந்திரம், சகல சவ்பாக்கிய குடுவை , கர்ய சித்தி யந்திரம் , சத்துரு வசிய யந்திரம், பால கிரக யந்திரம் , அஷ்ட லட்சுமி யந்திரம் , அஷ்ட பைரவி யந்திரம். மஹா கணபதி யந்திரம்
                குறிப்பு :   உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 
ஐந்தில் - ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் -  உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்று அர்த்தம். உங்கள் தாத்தா , அப்பா காலத்திலேயேஅதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லைஎன்று அர்த்தம். குல தெய்வத்தின் ஆசி பெற வில்லை என்றால் - உங்களுக்கு வாழ் நாள் முழுக்க , தடைகள் , முட்டுக் கட்டைகள் என்று தொடர் போராட்டம் தான். குல தெய்வம் - உங்கள் வம்சா வழியில்  பிறந்து வளர்ந்து, உங்கள் வம்சம் தழைக்க - தன் உடல் , பொருள் , ஆவியை அர்ப்பணித்தவராக கூட இருக்கலாம்.

      சரி, குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தைவணங்கலாம்
இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின்மேல் ஈடுபாடு என்று பாருங்கள். பரம்பரையாக , ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்ப சாமியோ, முனியோ. இல்லையா , அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். சதுரகிரி அருகில் இருப்பவர்கள் -மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம்.
இல்லையா ,  திருச்செந்தூர் முருகனைவணங்கலாம்.. ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.
மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது. இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம். திருச்செந்தூர் - குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்கும்
 குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால்,  வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வரவேண்டும்.ஒருவேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் வாழ்ந்துகொண்டிருந்தால்,.நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.
மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும் போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.

குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.

ஸ்ரீ அங்காளம்மன் மந்திரம்
நமசிவாய ஓம் சக்தி மஹா காளி மந்திர காளி பராசக்தி ஆழ்சூல் உலகை ஆட்டி வைக்கும் தாயே அங்காளபரமேஷ்வரி தேவியே சிவகாமியே நீல நிறம் கொண்டவளே
கொண்டவளே
நாக வடிவுடையவளே நான் நினைபதை நடத்தி வைப்பாயாக விரைந்து வா என் தாயே
ஓம் ஹ்ரீம் அங்காளி வசிய வசிய வசிய ஸ்ரீம் ஸ்வஹா
சக்கரங்களுக்கு வலுவூட்ட. அஷ்ட கந்தம் 1) புனுகு,) 2)கஸ்தூரா, 3) கோரோசனை, 4) குங்குமப்பூ, 5)அத்தர், 6) பச்சைக் கற்பூரம் , 7) ஜவ்வாது, 8) அரகஜா இவை அஷ்ட கந்தங்கள் ஆகும்.                                              ஐங்காயம் மந்திர சக்கி ஏற்பட அந்தந்த தகடுகளில் ஐங்காயம் பூச வேண்டும் 1) வசம்பு, 2)ஓமம்,3) உள்ளி (ஒருதலைப் பூண்டு), 4 )கடுகு, 5) பெருங்காயம்.
கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ ....

கணவன் மனைவி ,சண்டை சச்சரவுகள் நீங்க மோகினி மந்திர உபாசனை பெரிதும் துணை புரியும் .காதல் கை கூட ,நினைத்த வரன் அமைய ,நினைத்த பெண்ணை திருமணம் செய்ய இந்த மோகினி மந்திரம் உதவி செய்யும் .

 மோகினி வசிய யந்திரம் :




மூலமந்திரம் :

ஓம் சிவயநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசி வங் சுவாகா 

பூஜை முறை :

மேற்கண்ட மோகினி வசிய யந்திரத்தை அமாவாசை நாளன்று யந்திரம் எழுதி பூஜை துவங்க வேண்டும் .மேற்கண்ட மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 15 தினங்கள் பூஜை செய்து பௌர்ணமி அன்று முடியும் வகையில் பூஜை செய்ய வேண்டும் 

குறிப்பு : இதில் ஜன வசியம் ராஜ வசியம் ழூலிகை சேர்ந்து செய்ய பலன் அதிகம் இதை தவறாக பயன்படுத்த மற்றும் எச்சரிக்கையக செய்ய வேண்டும் எதிர் மறை உள்ளது கவனம் கவனம் 

நவாக்கரி எண்பத்து ஒருவகையாக நவாக்கரி அக் கிலீ சௌ முதல் ஈறே.

சௌமுதல் அவ்வொடு ஹௌஉடன் அம் க்ரீம் கௌவுகளும் ஐயுளும் கலந்து ஹ்ரீம் ஸ்ரீம் என்று ஒவ்வில் எழும் க்லீம் மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாயநம என்னே.
நவ அட்சரிம் என்பது தமிழில் மருவி நவாக்கரி ஆனது. ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம். ஒவ்வொன்றையும் முதலாக்கிக்கூற 81 அட்சரங்கள் ஆகும். முதல் வரிசையில் க்லீம் முதல் சௌம் வரை. அட்சரங்கள் இடம் மாறும்போது ஒளியும் நிறமும் மாறும்.
ஒன்பது வரிசையில் ஒவ்வொரு வரிசையும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் கூறியபின் ஓம் சிவாயநம என முடிக்கவும்.
மேலிருந்து கீழாக கூறுதல்

க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்        

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்

கீழிருந்து மேலாக கூறுதல் முடிக்கும்போது ஓம் சிவாய நம என முடிக்கவும்.

சௌம்

ஔம்

ஹௌம்

க்ரீம்

கௌம்  

ஐம்

ஹ்ரீம்

ஸ்ரீம்

க்லீம்

நவாக்கரியாவது நானறிவித்தை நவாக்கரி உளெழு நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத நவாக்கரி சக்தி நலம்தரும் தானே. நலந்தரு கல்வியும் ஞானமும் எல்லாம் உரம்தரும்வல்வினை உம்மை விட்டோடிச் சிரம் தரு தீவினை செய்வது அகற்றி வரம்தரு சோதியும் வந்திடும் காணே.
நான் அனுபவித்த மந்திரம் வித்தை இது.நாவுக்குள் மௌனமாக இதை ஓதினால் நன்மைகள் தரும். நவாக்கரி என்பது உள் எழு நன்மை என்பதால் உடம்பிற்குள் சார்த்தி சொல்லல் ஆகும். இந்திரயோனி- உள்நாக்கு, பிரம்மநாளம்- தலைஉச்சி. நவாக்கரி சக்கரம் ஓதுவதால் கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய வரம் தரும் உள் ஒளி உண்டாகும்.

நவாக்கரி அட்சரம் உடல் உள்ளே சார்த்துமிடம்.

க்லீம்- மூலாதாரம்

ஸ்ரீம்- சுவாதிட்டானம்

ஹ்ரீம் – மணிப்பூரகம்

ஐம்- அநாகதம்

கௌம் – விசுத்தி

க்ரீம்- இந்திரயோனி

ஹௌம்- ஆக்ஞா

ஔம்- நெற்றி உச்சி

சௌம்- பிரம்ம நாளம்

மேலிருந்து சொல்லி கீழிருந்து மேல்வரை சொல்லுவது ஒரு முறையாகும்

நினைந்திடும் அச்சிறீம் அக்கிலீம் ஈறா நினைந்திடும் சக்கரம் ஆதியும் ஈறும்

நினைந்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே நினைந்திடும் அர்ச்சனை நேர்தருவாளே

ஸ்ரீம் என்பதை முதலாகவும் க்லீம் என்பதை இறுதியாகவும் இச்சக்கரம் ஓதி நெல்லும் அருகம்புல்லும் தூவி அர்ச்சனை செய்க பராசக்தி அருள் புரிவாள். முதலில் இருந்த க்லீம் இதில் இறுதியானது. இரண்டாவதாக இருந்த ஸ்ரீம் முதலாவதானது. இதுபோல் ஒன்பது ஒலிகளும் முதலும் ஈறும் ஆகும்.
ஹ்ரீம் முதலாகவும் ஸ்ரீம் இறுதியாகவும் சொல்வதால் நாடாளும் அரசரும் வசமாவர்.
ஐம் முதலாகவும் ஹ்ரீம் இறுதியாகவும் சொல்வதால் நால்வகை வாக்கைன் சக்தியை அடியலாம். மேலும் வேதம் ஆகமம் ஆகியன பயிலாம்.
கௌம் முதலாகவும் ஐம் இறுதியாகவும் சொல்வதால் பகையை வெல்லலாம் ஓதிய்வர்களை பல உயிர்களும் வணங்கும்.
க்ரீம் முதலாகவும் கௌம் இறுதியாகவும் சொல்வதால் தெய்வ உறவாகி மழையும் செல்வமும் தரும்.
ஹௌம் முதலாகவும் க்ரீம் இறுதியாகவும் சொல்வதால் திருஐந்து எழுத்து ஓதி பயன் பெறுவர். மனோன்மணியின் அருள் கிடைக்கும்.
ஔம் முதலாகவும் ஹௌம் இறுதியாகவும் சொல்வதால் சுழுமுனை நாடியை வசம் செய்யும் அமுதேச்வரியின் அருள் கிடைக்கும்.
சௌம் முதலாகவும் ஔம் இறுதியாகவும் சொல்வதால் தலையில் சோதி விளக்காக பராசக்தி தெரிவாள்.
ஏய்ந்த மர உரி தன்னில் எழுதிநீ வாய்ந்த இப்பெண் எண்பத்தொன்றில் நிறைந்தபின்காய்ந்த அவிநெய் எள்கலந்து உடன் ஓமமும் ஆம்தலத்து ஆம் உயிர் ஆகுதி பண்ணே
மர உரியில் ஒன்பது பீஜங்களையும் ஒன்பது வகையாக எழுதி ஓமத் தீயில் நெய்யும் எள்ளும் வார்த்து உயிரையே நெய்யாகத் தருவதாய் எண்ணி ஆகுதி செய்க. காய்ந்த வாழை மரப்பட்டையில் நெய்யில் குங்குமம் கரைத்து நவாக்கரிச் சக்கரம் 9 வகை 81 வருமாறு வரிசையில் தனித்தனியே எழுது.

க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்ஹௌம்ஔம்சௌம்
ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்ஹௌம்ஔம்சௌம்க்லீம்
ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்ஹௌம்ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்
ஐம்கௌம்க்ரீம்ஹௌம்ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்
கௌம்க்ரீம்ஹௌம்ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்
க்ரீம்ஹௌம்ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்
ஹௌம்ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்
ஔம்சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்ஹௌம்
சௌம்க்லீம்ஸ்ரீம்ஹ்ரீம்ஐம்கௌம்க்ரீம்ஹௌம்
ஔம்